பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #34
இந்த உலகத்தில் உள்ளவர்கள் நீண்ட காலம் உன்னைப் பற்றி நீங்காத பழியை பேசுவார்கள். பல புகழை உடைய உன்னைப் போன்றவனுக்கு இப்படிப்பட்ட அவச்சொற்கள் மரணம் போன்றது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இந்த தர்ம யுத்தத்தை நீ செய்யவில்லை என்றால் இந்த உலகத்தில் உள்ளவர்கள் நீண்டகாலம் உன்னை இகழ்ந்து கொண்டே பேசிக் கொண்டிருப்பார்கள். தர்மத்தின் வழி நிற்பவன். யாராலும் செய்ய முடியாத பல மேலான தவங்கள் செய்து பல அஸ்திர சாஸ்திரம் கற்றவன். தைரியம் மிகுந்தவன் என்றெல்லாம் பெரும் புகழ் பெற்ற உனக்கு உலக மக்களின் இந்த இகழ்ச்சியான அவச் சொற்களும் பழிச் சொற்களும் மரண அவஸ்தையை கொடுக்கும். ஆகவே இந்ந பழிச்சொல்லுக்கு ஆளாகாமல் இந்த யுத்தத்தை செய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
