பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #27
இதன்படி பிறந்தவனுக்கு இறப்பு நிச்சயம். இறந்தவனுக்கு பிறப்பு நிச்சயம். இந்த நிகழ்வுகள் தவிர்க்க முடியாதது ஆகும் இதற்காக நீ வருந்துதல் தகாது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
மண்ணை வைத்து பானை செய்து உபயோகப்படுத்தலாம். பானை உடைந்தால் மீண்டும் அது மண்ணோடு மண் ஆகிறது. அந்த மண்ணில் மீண்டும் புதிய பானை செய்யலாம். அது போல் இறப்பு பிறப்பு என்பது எப்போதும் இருக்கும் ஒரு பொருளின் நிலை மாறுபாடே ஆகும். இந்த உலகத்தில் பிறந்தவைகள் அனைத்தும் இறப்பதை கண்கூடாகப் பார்க்கின்றோம். அதே போன்று இறந்தவைகள் அனைத்தும் மீண்டும் பிறப்பது உறுதி. இறப்பு பிறப்பு என்ற சுழற்சி தவிர்க்க முடியாதது இது இயற்கையாகும். ஆகவே அர்ஜூனா நீ வருத்தப்படாதே என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
