பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-52
எப்போது உன்னுடைய புத்தியானது மோகம் என்ற சேற்றை முற்றிலுமாக கடந்து விடுகிறதோ அப்போது நீ கேட்டவை பற்றியும் கேட்கப்படுகிறவை இவை இரண்டிலும் உனக்கு வேதனை ஏற்படுத்தாமல் இவ்வுலக போகங்களில் இருந்து விடுபடும் வைராக்கியத்தை அடைவாய்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத கர்ம யோகத்தை கடைபிடித்து வாழ்ந்தால் தூய்மையான மனம் பிறக்கும். அப்போது உள்ள அறிவைக் கொண்டு மோகம் (மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி) என்னும் சேற்றை கடந்து விட்டால் பரம் பொருளை அறிந்து கொள்ளும் ஞானம் உண்டாகும். இதனால் இது வரை நீ கேட்டவை பற்றியும் இனி கேட்கப்படுபவை பற்றியும் உனக்கு கவலை இருக்காது. இந்த உலக போகங்களில் இருந்து விடுபடும் வைராக்கியத்தை அடைவாய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
