கோயில் கர்ப்பக்கிரகம்

கோயில் கர்ப்பக்கிரகத்தை அமைக்கும் போது அங்கே எந்தப் பக்கத்திலிருந்தும் சூரிய ஒளியோ வெளிச்சமோ எளிதில் புகாதபடி மிகத் தடிமனான கற்களைக் கொண்டு கட்டினார்கள். இதன் பின்னே ஓர் அறிவியல் உள்ளது.

ஒரு மனிதனின் மனம் ஐம்புலன்களின் வழியாக வெளி உலகத்தை பார்க்கும் போது வெளி உலகத்தோடு தொடர்பில் இருக்கும். ஆனால் கண்களை மூடி இருக்கும் போது இருட்டுடாக இருக்கும். அப்போது மனம் தானாகவே உள்நோக்கி பார்க்கத் துவங்கும். கோயிலுக்கு சென்று அங்கே மூலஸ்தானத்தில் இருட்டில் விளக்கு வெளிச்சத்தில் இறைவனை பக்தியோடு இறைவனை பார்க்கும் மனித மனமானது சுருங்க துவங்குகிறது. அந்தச் சிலையிலிருந்து வெளிப்படும் காந்த அலைகளையும் மந்திரங்களின் அதிர்வுகளையும் ஐம்புலன்களும் அடங்கிய நிலையில் மனித மனம் எந்த அளவிற்கு அடங்கியிருக்கிறதோ அந்த அளவிற்கு அந்த உடல் கிரகித்துக் கொள்ளும். கோயிலுக்கு செல்வது நமக்கு வேண்டியவற்றை கடவுளிடம் வேண்டிப் பெறுவதற்கு மட்டுமல்ல. வெளி உலக தொடர்பில் இருக்கும் குழப்பமடைந்த மனதை அந்த இருண்ட அறைக்குள் உள்ள இறைவனிடம் மனதை ஒரு நிலைப்படுத்தினால் மனம் அமைதி அடையும். அதில் கிடைக்கும் ஆனந்தம் வேறு எதிலும் அனுபவிக்க முடியாது. இந்த வழிபாட்டு முறையும் ஒரு வகை தியானமே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.