சுலோகம் -72

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #25

ஆத்மா புலன்கள் மூலம் அறியப்பட இயலாதவன். மனதால் சிந்தித்து அறிய இயலாதவன். எந்த விதமான மாறுதல்களும் இல்லாதவனாக உள்ளான். ஆகவே அர்ஜூனா இப்படி ஆத்மாவை அறிந்து கொண்ட பின்னர் ஆத்மாவைக் குறித்த வருத்தத்தை நீ அடையக் கூடாது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

பார்த்தல் கேட்டல் சுவைத்தல் நுகர்தல் உணர்தல் என்ற ஐந்து புலன்களால் ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாது. இப்படித்தான் இருப்பான் என்று மனதால் சிந்தித்துப் பார்த்து ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாது. ஆத்மாவானது இறைவனிடம் இருந்து பிரிந்து வந்தபோது எப்படி இருந்ததோ அதேபோல் இறைவனிடம் சென்று சேரும் வரை எப்போதும் மாறாமல் உள்ளது. ஆகவே அர்ஜூனா புலன்களால் சிந்தனையால் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத இந்த ஆத்மாவைப் பற்றி நீ வருத்தப்படக் கூடாது என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.