பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-59
புலன்களின் மூலம் போகப் பொருட்களை ஏற்றுக் கொள்ளாத மனிதனுடைய புலன் நுகர் பொருட்களை மட்டுமே விலகுகின்றன. ஆனால் அவற்றில் தங்கியுள்ள பற்று விலகுவதில்லை. இந்த புத்தி உறுதியானவனுக்கு பரமாத்வை தரிசித்த பிறகு அந்த பற்றும் விலகி விடுகிறது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
உலகப் பற்றுகளின் மீது புலன்கள் செல்லாதவாறு தனக்குள் இழுத்துக் கொண்ட உறுதியுடையவனின் புலன்கள் உள்ளிழுக்கப் படுவதால் ஆசைப்படும் பொருளின் மீது மட்டுமே அவனது புலன் விலகுகிறது. ஆனால் பொருளின் மீது இருக்கும் ஆசை அவனிடம் இருந்து விலகுவதில்லை. ஆனால் இந்த புலன்களை உள்ளிழுத்துக் கொண்டதன் பயனாக அவனது மனம் தனக்குள் ஒரு முகப்படுத்தப்பட்டு தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து தரிசிப்பான். இறைவனின் தரிசனத்தை தனக்குள் கண்ட பிறகு அவன் அந்த பொருளின் மீது வைத்திருந்த ஆசையும் அவனை விட்டு விலகி விடுகிறது.
