திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்

யானையை அடக்கிய கோழி

யானை அளவு எதிரியின் பலம் இருந்தாலும் இந்த இறைவனின் கருணை இருந்தால் எதிரியை வென்றிடலாம்

சோழ அரசர் ஒருவர் யானை மேல் உலா வந்த போது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும் பாகனும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும் மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது. யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன் சிவனே தன்னையும் மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றிய இறைவனுக்கு கோயில் எழுப்பினான். சிவனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் சூட்டினான். பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது யானையை கோழி அடக்கியது போல அவர்களை அடக்கும் பலத்தை இத்தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார்.

திருச்சி உறையூரில் உள்ள பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில் கல்தூணில் இந்த இந்த சிற்பம் உள்ளது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாறு. கிட்டத்தட்ட 1300 வருடங்களுக்கு முன் இந்த மிதிவண்டி படத்தை தூணில் சிற்பமாக வடித்துள்ளார்கள் நமது முன்னோர்கள். மிதிவண்டி தயாரிக்கப்பட்டது ஒரு 200 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்ததாக தற்போதைய வரலாறு உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.