மெய்ஞானபுரீஸ்வரர்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டி வைரவன்பட்டியில் மெய்ஞானபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. மூலவர் திருமெய்ஞான சுவாமி லிங்கத் திருமேனியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்மாள் பாகம்பிரியாள். பெரிய பிரகாரம் நந்தி மண்டபம் உள்பிரகாரம் மகாமண்டபம் அர்த்தமண்டபம் கருவறை என முழுவதும் கற்றளியில் அமைந்துள்ளன. சிறப்பு மூர்த்தியாக தெற்கு நோக்கிய பைரவர் உள்ளார். இத்தலத்தில் மெய்ஞானபுரீஸ்வரர் மூலவராக இருந்தாலும் பைரவரே பிரதான மூர்த்தியாக இருக்கிறார்.

கி.பி.985 -1014ல் அரசு புரிந்த முதலாம் இராஜராஜ சோழன் மாமன்னர் வழிபட்டது. பிரபாகரன் என்ற நூலை போதிக்கும் அந்தணர்களுக்கு அறக்கொடை நல்கியது. மாறவர்மன் குலசேகர பாண்டியன் சுந்தரபாண்டியன் விஜய நகர அரசர்கள் புஜபலதேவன் அச்சுத தேவராயன் மதுரை விசுவநாத நாயக்கர் தஞ்சை ரகுநாத நாயக்கர் ஆகியோர் கால கல்வெட்டுகளும் தான சாசனங்களும் இங்குள்ள கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.