ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 654

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ஒரு தாய் தந்தை இருக்கிறார்கள் சில பிள்ளைகளை பெறுகிறார்கள் அதில். இரண்டு பிள்ளை உயர்ந்த பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்கிறார்கள், இரண்டு பிள்ளை ஏதோ ஒரு காரணத்தால் சரியான நிலையில் இல்லாமல் சிரமப்படுகிறார்கள் என்றால் அந்த தாய் தந்தை என்ன எண்ணுகிறார்கள் என்றால் நான்கும் நமது பிள்ளைகள் தான் இரண்டு நன்றாக வாழ்கிறது. இந்த இரண்டு நிலை எண்ணினால் மீதி இருக்கும் இரண்டு பிள்ளைகள் நன்றாக வாழ வைக்கலாமே என்று தானே எண்ணுவார்கள். அப்படி அல்லாமல் என்னையும் தாய் தந்தை படிக்க வைத்தார்கள் உன்னையும் தாய் தந்தை படிக்க வைத்தார்கள். நீ சரியாக படிக்கவில்லை அதனால் அவதிப்படுத்துகிறாய் நான் ஒன்றும் உனக்கு உதவ மாட்டேன் போ போ என்று நன்றாக இருக்கும் பிள்ளைகள் வட்டம் வரும் பிள்ளைகளை விரட்டினால் அது மேலிருந்த வாரியாக பார்த்தால் அறிவுக்கு ஏற்புடைய வாதமாக தெரிந்தாலும் ஈன்றோர்க்கு (பெற்றவர்களுக்கு) ஏற்றுக் கொள்ளப்படுமா. இவன் செய்வதால் ஒன்றும் குறைந்து போகப் போவதில்லை என்ற நிலை இருக்கும்போது தாராளமாக செய்யலாம் என்று எண்ணுவது போல இருக்கின்ற பிள்ளை நன்றாக இருக்கிறது என்று பெற்றோர்கள் மகிழ்வார்களா அல்லது அவதிப்படும் பிள்ளைக்கு இவன் உதவுவில்லை என்று வேதனைப்படுவார்களா .

அதைப் போலதான் இறைவன் படைப்பில் அனைத்தும் இறைவனுக்கு பிள்ளைகளே. கருமத்தாலா அல்லது வேறு காரணத்தாலோ ஒருவன் அவதிப்படும்போது நன்றாக இருக்கின்ற மனிதன் அப்படி இல்லாத மனிதனுக்கு தன்னிடம் கிடைத்த உயர்ந்த பாக்கியத்தை வாய்ப்பை அவனுக்கும் தந்து வாய்ப்பிருக்கும்போது அவனுக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அது செய்வது. தேவைப்பட்டால் அவனுக்கு சொந்தமாக ஏதாவது செய்து பிறர் கையை ஏந்த வேண்டிய நிலை இல்லாமல் வாழ்வதற்கு உண்டான வழிமுறைகளை செய்வதுதான் உத்தமமான காரியம். இதை செய்வது ஒரு ஏழை மைந்தன் நல்லதொரு தொழில் வாய்ப்பை தருவது அல்லது அவனுக்கு உள்ள சரியான பிரச்சனைக்கு சரியான தீர்வை செய்வதோ சகஸ்ரம் சகஸ்ரம் சகஸ்ரம் (ஆயிரம் ஆயிரம் ஆயிரம்) யாகம் செய்வதை விட உயர்வு.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.