ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 521

கேள்வி: தீட்டு என்ற ஒன்று இருக்கிறதா? தீட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை யார் வகுத்தார்?

பதில்: இறைவனின் அருளால் ஒவ்வொரு மனிதனையும் புத்தியை தீட்டு. அறிவைத் தீட்டு. ஞானத்தை தீட்டு என்றுதான் நாங்கள் கூறுகிறோம். உள்ளம் சுத்தமாக இருக்கும் நிலையில் நாங்கள் புற சுத்தத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இருந்தாலும் கூட இன்னவள் கூறியது போல மாதாந்திர விலக்கு என்பது பெண்களுக்கு அதிக அளவு உடல் சோர்வை தரக்கூடியது. அந்த நிலையில் பெண்கள் ஓய்வாக இருப்பது அவசியம் என்பதால் ஓய்வாக இருக்கும்படி பணிக்கப்பட்டார்கள். இதை ஒதுக்கி வைப்பதாக எண்ணி விடுதல் கூடாது. அதற்காக ஓய்வாக இருந்து கொண்டு மானசீகமாக இறைவனை வணங்க கூடாது என்பது இல்லை.

இதுபோல் மனரீதியாக ஒரு மனிதன் பரிசுத்தமாக இருக்க வேண்டும். உடல் ரீதியாகவும் சுத்தமாக இருந்தால் அது புத்துணர்ச்சியை தரும் என்பதால் உடல் உள்ளம் இரண்டுமே சுத்தமாக இருப்பது மிக மிக அவசியமாகிறது. இன்னொன்றை மனிதன் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இறைவனின் படைப்புகளில் எதையும் குறையாக நாங்கள் பார்ப்பதில்லை. இருந்தாலும் உடல் நலம் கருதியும் உடல் சோர்வை கருதியும் சிலவற்றை வகுத்து தந்திருக்கிறோம். எனவே இதை குற்றமாகவோ தோஷமாகவோ பார்க்காமல் உடல் நலம் கருதி கூறப்பட்டது என்று எடுத்துக் கொள்வது ஏற்புடையதாக இருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.