ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 626

கேள்வி: மகான்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வேறுமாடு என்ன?

மகான்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் ஒரு கஷ்டம் வரப்போவது தெரியாமல் வந்தபின் ஒரு மனிதன் அதில் சிக்கிக் கொள்கிறான். நடக்கப்போவது தெரிந்தும் அது இறைவன் செயல் என்று நாங்கள் அதில் சிக்கிக் கொள்வோம் இதுதான் மகானுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு.

ஆடுகளத்திலே விளையாடுவது மனிதர்கள்தான். நாங்கள் நடுவர்கள் தீர்ப்பு சொல்ல வேண்டியதுதான் எங்கள் கடமையை தவிர இப்படி ஆடு அப்படி ஆடு என்று ஆட்டம் தொடங்கும் வேண்டுமானால் சொல்லலாம். ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது நாங்கள் யார் பக்கமும் பேசக் கூடாது. எனவே வழிகாட்ட நாங்கள் என்றும் இருக்கிறோம். ஆனால் அந்த வழியில் செல்ல மனிதர்கள்தான் தயாராக இல்லை. உலகியல் பிரச்சனைகளை ஆன்மீகப் பிரச்சினைகளோடு இணைத்து குழப்புவதே மனிதனுக்கு இயல்பாகி விட்டது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.