ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 640

கேள்வி: குறிப்பிட்ட ஒரு நன்மை நடக்க வேண்டும் என்று எழுப்பப்பட்டுள்ள கோயில்களில் வேறு நன்மைகளை வேண்டினால் கிடைக்காதா?

ஒரு ஆலயத்தின் மண்ணை மிதிக்கும் பொழுதே கிரக நிலை கொண்ட மனிதர்களின் தோஷங்கள் குறையட்டும் என்பதற்காக விதவிதமாக ஆலயங்கள் இங்கே எழுப்பப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஒரே ஆலயம் சராசரி மனிதன் செல்லும் பொழுது உலகியல் தேவையை தரும் தருவாகத் தோன்றுகிறது. அதே ஆலயத்திற்கு ஓரளவு பற்றை விட்ட ஞானி செல்லும் பொழுது முக்தியே நல்கின்ற ஆலயமாக தோன்றுகிறது. எனவே இருப்பது அதுபோல் ஒரே ஆலயம்தான். செல்லுகின்ற பக்தர்களின் என்ன ஓட்டத்திற்கு ஏற்ப மனோ தர்மத்திற்கு ஏற்ப மனப்பக்குவத்திற்கு ஏற்ப அந்த மனிதனுக்கு நல்லருளை வழங்குகிறது. எதுவும் வேண்டாம் இறைவா நீ தான் வேண்டும் என்ற என்று வேண்டுகின்ற உள்ளங்கள் ஆலயம் செல்லும் பொழுது அது எந்த நோக்கத்திற்காக எழுப்பப்பட்டுள்ள ஆலயமாக இருந்தாலும் அதுபோலவே நலம் நடக்கிறது

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.