ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 656

கேள்வி: எதை என்றும் புரியாத அளவிற்கு கூட கிரகங்கள் பிடியிலிருந்து தப்பித்துக் காெள்ள ஒரே வழி?

அண்ணாமலையே அண்ணாமலையை (திருவண்ணாமலையை) நாடி நாடி வந்தாலே பாேதுமானது. கிரகங்கள் ஒன்றும் செய்யாது என்பேன். திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்து வர வேண்டும். இதனால் பல கர்மாக்கள் நீங்கும். அண்ணாமலை உண்ணாமலை கார்த்திகை திங்களில் (கார்த்திகை மாதத்தில்) அழகாகவே இங்கே நடனம் ஆடுவார்கள் என்பேன். அவர்களுக்கு இல்லம் கார்த்திகை மாதத்தில் வந்து செல்வார்கள் என்பேன். அழகாக பின் மகிழ்வான் என்பேன் ஈசன் தீபத்தன்று கூட.

இத்தீபத்தின் மகிமை தீபத்தை கூட எதற்காக ஏற்றுகின்றீர்கள்? எதை என்று கூட யாருக்கும் தெரிவதில்லை. ஏதோ தீபம் ஏற்றி விட்டார்கள் என்பதை கூட ஆனால் இம்மலையானது (திருவண்ணாமலை) முன்னொரு காலத்தில் தங்கம் வைரம் இதையன்றி கூட பன்மடங்காக இதனடியில் பல சித்தர்களும் கூட.

அவ் ஒளியை (மலையில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது) எழுப்பும் பொழுது அப்பனே எதை எவற்றினின்றும் கூட அனைத்து சித்தர்களின் ஒளி தான் அது. அதை கண்களால் காண்கின்ற பொழுது நம் மனதில் கூட அப்படி சில தீய வினைகள் அகலும். அதனைப் பார்த்திட்டு (திருவண்ணாமலை தீபத்தை பார்த்திட்டு) அதனை நம் நெஞ்சில் நிறுத்திட்டு மனதில் ஓர் மாதம் அல்லது இரு மாதம் அல்லது ஐந்து மாதங்கள் கூட அந்த தீபத்தை பார்த்திட்டு தீபத்தை எதை என்று உணர நம் மனதிலே நிறுத்தி அண்ணாமலையில் தீபம் ஏற்றினார்களே அதை நினைத்து அதையே மனதில் நிறுத்தி அதையே வைத்துக் கொண்டு அத் தீபத்தை நினைத்துக் கொண்டு தியானம் செய்து கொண்டிருந்தால் பல கர்மாக்கள் கரையும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.