ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 3

கேள்வி: விராலி மலையில் மயில் தரிசனம்?

பதில்: மயிலை கனவில் கண்டாலே புண்ணியம். நனவில் கண்டால் அதை விட புண்ணியம். ஆனால் மனிதன் கண்ணில் மயில் பட்டால் மயிலுக்குத் தான் பாவம்.

கேள்வி: ஐயனே சம்பளத்தில் ஒரு 10% தானத்திற்கு கொடுத்தால் போதுமா?

பதில்: அப்படி என்றால் கர்மவினையும் 10% தான் குறையும் போதுமா?

கருத்து : இதற்கு பொருள் என்னவென்றால் வருமானத்தில் சதவீதம் பார்த்து தானம் செய்யவதை விட தேவைப் படுபவர்களுக்கு தேவையானதை சரியான நேரத்தில் எதிர்பார்ப்பில்லாமல் தானம் செய்வதே சரியானது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 2

குருநாதா உலகம் அழியப் போகிறது என்று பலர் கூறுகிறார்களே?

இறை அருளால் இந்த நொடி வரை சிறைச் சாலையை மூடுவதாக இறைக்கு எந்த எண்ணமும் எமக்கு தெரிந்தவரை இல்லையப்பா. ஒரு வேளை பூலோகத்தில் உள்ள அனைத்தும் ஆத்மாவும் நல்லவர்களாக மாறிவிட்டால் அப்படி ஒரு நிகழ்வு நிகழலாம். உலகம் முழுவதும் எப்போதும் அழியாதப்பா. சில பகுதிகள் முற்றிலும் மறைந்து விடக்கூடிய சூழல் உண்டாகுமே அன்றி மொத்த உலகமும் முற்றில அழிந்து போகாதப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 1

கிளி ஜோதிடம் பற்றி

இதனை நம்ப வேண்டாமப்பா. ஆறு அறிவுக்கு ஐந்து அறிவா ஆருடம் சொல்வது? யோசிக்க வேண்டும். அது போன்ற ஜோதிடத்தை உன்னிப்பாக கவனித்தால் அந்த மனிதனின் கை விரல்கள் எவ்வாறு அசைகிறதோ அதற்கு ஏற்ப தான் அந்த பறவை செயல்படும். எனவே அவன் விரலை ஒரு விதமாக சைகை செய்வான். அதற்கு ஏற்ப தான் அந்த பறவை நடந்து கொள்ளும். என்றாலும் இந்த கிளி ஒரு காலத்தில் ஓர் உயர்ந்த நிலையில் இருந்தது என்பது உண்மை. தற்காலத்தில் இது வெறும் வயிற்று பிழைப்பு என்பதால் இவற்றை முற்றிலும் ஓரம் கட்டுவது நல்லது.

இது போன்று தான் ஆங்காங்கே இறைவன் வாக்கு சொல்கிறான். அம்பாள் வந்து வாக்கு சொல்கிறாள் என்பது எல்லாம். இது சுத்த வயிற்று பிழைப்பு. எனவே பிழைப்பு என்ற வகையிலே அந்த மனிதன் பிழைத்து விட்டு போகட்டும். சாதரணமாக இது போன்ற வாக்குகளிலே பெரிய அளவிலே பாதிப்பு இல்லாத வரையில் எந்த பிரச்சனையும் இல்லை. இது போன்றவற்றை பெரிதாக எடுத்துக் கொண்டு அதற்கு முக்கியத்துவம் தர வேண்டாம்.