ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 530

கேள்வி: பாவ கர்மாக்களை குறைக்க உடலோடு இருக்கும் பொழுது மட்டும்தான் பிரார்த்தனை செய்ய முடியுமா? அல்லது உடலை உகுத்த பிறகும் அந்த ஆன்மா பிரார்த்தனை செய்து கர்ம வினைகளை குறைத்துக் கொள்ள முடியுமா?

பூர்வ புண்ணியம் அதிகமாக இருந்தால் விலங்கு நிலையில் இருந்தால் கூட இறைவனை வணங்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இதற்கு திருவானைக்காவல் திருவெறும்பூர் உதாரணம். எனவே அப்படி பூர்வ புண்ணியம் அதிகமாக பெற்றவர்கள் தேகத்தை இழந்த பிறகும் சூட்சும சாரீரத்தில் அலைந்து கொண்டே கூட இறை நாமத்தை ஜெபிக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. ஆனால் லகரத்தில் சிலருக்கு தான் அந்த வாய்ப்பு கிட்டும். ஏனையோர்க்கு எல்லாம் குழப்பத்திலும் பயத்திலும் தான் இறந்து விட்டோம் என்று கூட தெரியாத நிலையில் எப்பொழுதும் அலைந்து கொண்டிருப்பார்கள். இது போல் நிலையிலேயே பூர்வ புண்ணியம் இருந்தால்தான் உடலோடு இருந்தாலும் வாழ இயலும். உடலை விட்டாலும் நன்றாக வாழ இயலும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.