ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 552

கேள்வி: குழந்தை பிறந்ததும் முதலில் தேன் கொடுப்பதும் பின்பு சில நாள் கழித்து குழந்தைக்கு சிகையை அகற்றுவது பற்றியும்:

இறைவன் அருளால் சிகையை அகற்றுவது என்பது ஆரோக்கியம் தொடர்பான விஷயம். சிகையை அகற்ற அகற்றத்தான் சிகை நன்றாக ஆரோக்கியமாக வளரும். இதை இறை நாமத்தோடு தொடர்பு கொண்டு விட்டால் மனிதன் பயபக்தியோடு செய்வான் என்பதற்காக முன்னோர்கள் வகுத்தது. மற்றபடி தூய்மையான தேனை தருவதும் ஆரோக்கியம் தொடர்பான விஷயம். நல்ல விதமான மழலை பேச்சு வரட்டும் நல்லவிதமான நோய் எதிர்ப்பு சக்தி வரட்டும் என்பதற்காகத்தான். மற்ற விஷயங்கள் எல்லாம் மனிதர்கள் நாகரீகம் கருதி ஏற்படுத்திக் கொண்ட சடங்குகள் அவ்வளவே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.