ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 599

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இந்த உலகில் உள்ள அனைவருமே இறைவனின் பிள்ளைகள். அதில் ஒரு பிள்ளைக்கு அதிக செல்வத்தை கொடுத்ததன் காரணம் வாடுபவனுக்கு கொடுத்து உதவுகிறானா? என்று சோதிக்கத்தான். தர்மத்தை செய்து கொண்டே இருங்கள். அது புண்ணியவழி என்ற எண்ணம் இல்லாமல் செய்ய வேண்டும். யாருக்கெல்லாம் தேவையோ அவர்களுக்கு எல்லாம் நேரிய வழியில் பொருள் ஈட்டி தந்து கொண்டே செல்லுங்கள். செல்வம் உங்கள் பின்னால் வரும். இதனை சோதனை மார்க்கமாக கூட செய்யலாம். ஏனென்றால் ஒவ்வொரு யுகத்திலும் செல்வந்தர்கள் குறைவு. வறுமையாளர்கள் அதிகம். கொடுத்து கொடுத்து வறுமை அடையும் விதி இருந்தாலும் பாதகம் இல்லை. கொடுத்ததினால் ஒரு வறுமை நிலை வந்தால் அதுதான் அந்த உலகத்திலேயே உச்சகட்ட வளமை. அவன்தான் இறைவனுக்கு பக்கத்தில் இருக்கிறான் என்பது பொருளாகும். எனவே இந்த கருத்தை மனதில் வைத்து இனி வருகின்ற ஒவ்வொரு கணத்திலும் தேடித்தேடி தர்மம் செய்வதை ஒரு லட்சியமாக கொண்டு விட்டால் அவர்களுக்கு எம்ஆசி என்றும் தொடரும். ஆசிகள் சுபம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.