ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 605

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

சித்தன் இன்று பகர்ந்தால் நாடு முழு இனம் என்பது கிடையாது. வேறு தேசத்தில் இருந்து இங்கும் இங்கிருந்து வேறு தேசங்களுக்கும் சென்று மனிதர்களோடு மனிதர்களாய் பணியாற்றுவார்கள். இங்கு மனிதனாகப் பிறந்து தன்னுள் இருக்கும் தெய்வீக ஆற்றலை உணர்ந்து கொண்ட பிறகு எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். இதுதான் சொந்த இடம் என்று சித்தர்களால் சொல்ல இயலாது. ஒரு சித்தர் என்பவரின் ஆத்மா உயர் நிலையில் இருக்கக் கூடிய ஒரு புண்ணிய ஆத்மாதான். ஆக எப்படிப் பார்த்தாலும் அந்த மேலுலகம் இறை உலகத்திலிருந்து வரக்கூடியவர்கள் தான் சித்தர்கள். போகருக்கு வேறு ஒரு சிறப்பு இருக்கிறது தெரியுமா? போகர் தான் இயேசுவாகப் பிறந்தார். இப்பொழுது சொல் போகருக்கு சீன தேசமா? இந்திய தேசமா? அல்லது வெளி தேசத்தில் வாழ்ந்த சிலுவைக்காரனா? அல்லது கைலாயமா? பழனியில் தான் போகரை காணலாம் என்று சொன்னால் அது தவறு. பழனியிலும் காணலாம் என்றால் சரி.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.