ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 679

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

எங்கே சத்தியம் நிரந்தரமாக தங்குகிறதோ எங்கே தர்மம் நிரந்தரமாக தங்குகிறதோ எங்க கருணை நிரந்தரமாக குடி கொண்டிருக்கிறதோ எங்கே பெருந்தன்மை நிரந்தரமாக குடி கொண்டிருக்கிறதோ எங்கே விட்டுக் கொடுக்கும் தன்மை நீடித்திருக்கிறதோ அங்கே இறையருள் இருந்து கொண்டே இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம். இறையருளை தக்க வைத்துக் கொள்ள என்ன வழி? என்று பார்த்து அந்த வழியிலே ஒருவன் சென்றால் ஏனைய பிரச்சினைகள் மெல்ல மெல்ல அவனை விட்டு சென்று விடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.