ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 462

கேள்வி: அனைத்து கோவில்களிலும் கர்ப்பகிரகத்தின் சுவற்றின் மேல் கஜலட்சுமி தாயார் இருப்பதின் தாத்பர்யம்:

ஆதிகாலத்திலே இந்தப் பழக்கம் இல்லையப்பா. இறையருளால் கூறவருவது என்னவென்றால் பிற்காலத்திலே இது ஏற்பட்டது. மனிதர்களுக்கு எந்த நிலையில் சென்றாலும் பொருளாசை என்பது விடாது. பொருளுக்குரிய தெய்வம் அன்னை மகாலட்சுமி என்று தெரிந்து விட்டதால் எல்லா இடங்களிலும் மகாலட்சுமி சின்னத்தை வைத்தால் மங்களமாகவும் பொருள் வரவாக இருக்கட்டுமே? என்றும் அதுபோல் இறையை ஆராதிக்கின்ற பணியை செய்கின்ற எனக்கு பொருள் வரவேண்டும் என்பதற்காகவும் பிற்காலத்திலே ஆலயம் நன்றாக இயங்க அங்கு நிரந்தர பொருள் சேரவேண்டும் என்பதற்காகவும் கூறப்பட்டது. அக்காலத்தில் சில இடங்களில் மகாலட்சுமிக்கு அனுதினமும் யாகமே நடந்ததுண்டு நிறைய பொன் பொருள் சேர்க்கை வேண்டும் நிறைய ஆடு மாடுகள் சேரவேண்டும் என்றெல்லாம். எனவே இவையனைத்தும் உலகியல் நோக்கத்திற்காக மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.