ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 554

கேள்வி: இராகுவும் கேதுவும் சேர்ந்திருக்கக் கூடிய திருப்பாம்புரத்தைப் பற்றி சொல்லுங்கள்:

இராகுவும் கேதுவும் எப்பொழுதுமே சேராதப்பா. இதுபோல் நிலையிலேயே பல்வேறு நாகதோஷங்கள் நீக்குகின்ற ஸ்தலங்களில் திருப்பாம்புரமும் ஒன்று. ஆனால் அங்கும் வழக்கம் போல் பல்வேறு இடைச்செருகல்கள் வந்துவிட்டன. எமக்கு ஏதோ சாபம் ஏற்பட்டதாகவும் அங்கு வந்து நீங்கியதாகவும் கூட வாசகங்கள் அங்கே பொறிக்கப்பட்டிருக்கிறது. இது எப்படியாயினும் இது போன்ற சாபநிவர்த்தி தலங்களிலே பரிபூரண உள்ளத்தோடு வேண்டிக் கொண்டால் கட்டாயம் நல்ல நன்மைகள் கிடைக்குமப்பா. அது மட்டுமல்ல பொதுவாக நாக தோஷம் அல்லது வேறு தோஷங்களுக்கும் பிரயாச்சித்தம் என்ற பெயரிலே அந்தந்த கிரகங்களுக்கும் கிரக அதி தேவதைகளுக்கும் ப்ரீதி செய்வதோடு அந்த கிரகம் தொடர்பான தர்மங்களையும் செய்ய வேண்டும். இராகு என்றால் விஷம் என்று வைத்துக் கொண்டால் விஷம் நீங்கும் மருந்துகளை வாங்கி ஏழைகளுக்கு தானம் செய்யலாம். ஒவ்வாமை நோய்க்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெறும் மனிதனுக்கு உதவியை செய்யலாம். குரு பிரீதி செய்ய வேண்டியவர்கள் குரு பிரீதி பூஜைகள் செய்வதோடு மனித நிலையிலே குருவாக இருக்கக் கூடியவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். இவைதான் உண்மையிலேயே குரு தோஷம் நீங்குகின்ற உபாயமாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.