ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 581

கேள்வி: கோவிலில் உழவாரப் பணி செய்யும் போது செடி கொடிகளை அகற்றினால் தோஷமா?

இதை கூறும் போதே இது பாவம் தான் என்றாலும் இறை இதை மன்னிக்கிறது. அகற்றப்பட்ட செடிகள் மீண்டும் துளிர்க்கின்ற தன்மையை பெறுவதால். அந்த செயல் அந்த செடி கொடிகளுக்கு பூரணமான அழிவை ஏற்படுத்துவதில்லை. ஒரு ஆட்டையோ மாட்டையோ ஒரு மனிதன் கொலை செய்யும்போது அது பரிபூரணமாக மரித்து விடுகிறது. ஆனால் செடி கொடிகளை அகற்றும் போது அதன் அடிவேரோ மாற்று விதைகளோ சற்று உயிர் பெறுவதால் அந்த ஜீவன் அதற்கு இடம் பெயர்ந்து விடுவதால் இதனால் வரக்கூடிய தோஷம் மன்னிக்கப் படக்கூடிய தோஷமாகி விடுகிறது. என்றாலும் கூட இதிலும் பாவம் சேர்வதால் தான் பிறவியற்ற தன்மை வேண்டும் என்று கூறுகிறோம். ஏனென்றால் ஒரு மனிதனால் இந்த பூமியிலே சிறிய பாவம் கூட செய்யாமல் வாழ முடியாது. வீடுகளைப் பொருத்தவரை வீட்டைச் சுற்றிலும் சிறியா நங்கை போன்ற மூலிகைகளை வளர்த்தால் பூச்சிகள் வராது. வேறு வழியின்றி வீட்டினுள் இருக்கும் பூச்சிகளை கொல்ல நேர்ந்தால் ஒருவன் செய்கின்ற தர்மங்கள் காரணமாக அந்த தோஷமானது மன்னிக்கப்படும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.