ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 302

கேள்வி: தென்மேற்கு பருவ மழை பரவலாக அதிகரிக்க வேண்டும். மேட்டூர் அணை விரைவில் நிரப்ப வேண்டும்:

பருவ நிலைகள் மாற்றங்கள் அடைந்து மனித சமுதாயத்திற்கு எதிராக இருக்கிறது என்றாலே அதாவது அதிக மழை அல்லது அறவே மழையற்றுப் போதல். அனல் அதிகமாக அடித்தல் அல்லது வெயிலோன் அடிக்காமல் போதல். காற்று இல்லாத நிலை அல்லது அதிக சூறை காற்று. இதனால் மனிதன் வாழ முடியாமல் போய் விடுகிறது. தர்மம் எங்கே குறைகிறதோ அங்கே இயற்கை தன் சீற்றத்தைக் காட்டும். எனவே மனிதர்கள் கூட்டாக சேர்ந்து நல்ல சத்சங்கமாக கூட்டுப் பிரார்த்தனை செய்வதும் தன்னிடம் இருக்கக் கூடிய மிகுதியான செல்வத்தை தக்க மனிதர்களுக்கு தாராளமாக பகிர்ந்து கொடுக்கக்கூடிய நிலை வரும் வரை இது போன்ற இயற்கை சீற்றங்கள் தொடரத்தான் செய்யும்.

கேள்வி: இறைவனை மோகினி அவதாரத்தில் எந்தெந்த கோவில்களில் தரிசனம் செய்யலாம்? மோகினி அவதாரத்திற்குண்டான ஸ்லோகம் கூறியருள வேண்டும்:

மகாவிஷ்ணுவை எந்த ஆலயத்திலேயே வணங்கினாலும் மோகினி ரூபமாகவும் பார்த்து வணங்கலாம். அதுபோல் நிலையிலே மகாவிஷ்ணுவிற்குரிய அனைத்து வழிபாடுகளும் அனைத்து மந்திரங்களும் இதுபோல் அவதாரத்திற்கும் பொருந்துமப்பா.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.