ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 525

கேள்வி: லக்னம் என்ற உயிருக்கு ஆறாம் இடத்து அதிபதியாகிய சூரியன் ஒரே சாரத்தில் ஒரே மாதத்தில் இருக்கும் பொழுது ஜாதகனுக்கு தோஷமா? பாவமா?

இறைவன் அருளால் ஜாதக நிலை என்பது மேலெழுந்தவாரியாகக் கூறினால் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத நிலையாகும். இருந்தாலும் சுருக்கமாக கூறுகிறோம் புரிந்து கொள்ள முயற்சி செய். உதாரணமாக பஞ்சம ஸ்தானத்திலே அரவு (நாகம்-ராகு) இருந்தால் பொதுவாக புத்திர தோஷம் என்று கூறி விடுவார்கள். ஆனால் எத்தனையோ மனிதர்களுக்கு பஞ்சம ஸ்தானத்திலே அரவு இருந்து எந்த விதமான பரிகாரமும் இல்லாமல் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஏனென்றால் அப்படி ஒரு பாக்கியம் புண்ணியம் வேறு வகையில் அங்கு இருக்கலாம். அல்லது புத்திரன் பிறந்து அவன் மூலம் துன்பப்பட வேண்டும் என்ற ஒரு தோஷம் அங்கு இருக்கலாம். எனவே தோஷம் பாவம் என்பது ஒன்று கிட்டாமல் போவது மட்டுமல்ல. கிட்டியும் அவனுக்கு துன்பத்தை தந்தாலும் அது தோஷத்தின் விளைவுதான்.

இன்னவன் வினவிய லக்ன பாவத்திலிருந்து ஆறாம் இடத்திற்கு உரிய கிரகம் அல்லது அந்த சாராம்சம் எதனோடு தொடர்பு கொண்டாலும் அதுபோல் அது தோஷத்தைதான் பெரும்பாலும் ஏற்படுத்தும். லோகாய ரீதியாக அது பாதிப்பை ஏற்படுத்தினாலும் கூட அவன் சற்றியே விழிப்புணர்வு பெற்று ஆன்ம வழியிலே வந்துவிட்டால் அந்த பாதிப்பை குறைத்து விடலாம். என்னவன் குறிப்பாக சூரியனை மையப்படுத்தி கேட்டதால் இது போல் இந்த தோஷத்திற்கு இது பாவமா? தோஷமா? என்று கேட்டால் ஆம் என்று தான் நாங்கள் கூறுவோம். சரியான பிரயாத்தம் சில ஆலயங்களிலே குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட தினத்திலே சூரியன் மூலஸ்தானத்தில் உள்ள மூலவரை வணங்கக் கூடிய ஒரு நிலையில் அந்த ஆலயம் எழுப்பப்பட்டிருக்கும். அதுபோன்ற ஆலயத்திற்கு சென்று வழிபடுவதும் சூரியனுக்கு உகந்த நட்சத்திரத்திலே சூரியனுக்கு உகந்த தலங்கள் சென்று வழிபாடு செய்வதும் அதோடு ஆதித்ய ஹ்ருதயத்தை ஓதுவதும் சூரியனுக்கு உண்டான ப்ரீதிகளை எந்தெந்த ஸ்லங்களில் சிறப்பாக செய்ய முடியுமோ அதனை செய்வதும் இதனையும் தாண்டி சூரியனுக்கு காரகத்துவம் உடைய தந்தை அரசு இது தொடர்பான விஷயங்களில் ஒருவனால் என்னென்ன வகையான தொண்டுகளை செய்ய முடியுமோ அதனை செய்வதும் பிராயச் சித்தமாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.