ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 592

கேள்வி: ராம நாமம் பற்றி:

ராம நாமம் ஜெபித்தார்கள். சம்பாதிக்கு சிறப்பு முளைத்தது என்றெல்லாம் படிக்கும் பொழுது இது சாத்தியமா? என்று கேட்கத் தோன்றும். அப்படியானால் ஒரு பறவையைப் பிடித்து சிறகுகளை அரித்துவிட்டு ராம நாமம் ஜெபித்தால் சிறகுகள் முளைக்குமா? என்றால் ராம நாமம் சக்தி உடையது. சிறகு என்ன கரங்கள் கால்கள் கூட ஒரு மனிதனுக்கு முளைக்கும். ஆனால் நாம ராமத்தை சொல்கிறவர்கள் பக்குவம் அடைந்து ஆத்ம சுத்தியோடு பற்றற்ற தன்மையோடு பல காலம் ராம நாமத்தை ஜெபித்து ஜெபித்து ஜெபித்து சித்தி பெற்றிருந்தால் உடனடியாக நடக்கும். மனம் ஒன்றாத பிரார்த்தனைகள் பலனளிக்காது. மந்திரங்களும் வழிபாடுகளும் ஒன்று தானப்பா. அதை கையாளும் மனிதனைப் பொறுத்துதான் உடனடி முடிவும் தாமதமான முடிவும். எனவே விளைவு எப்படி இருந்தாலும் பாதகம் இல்லை என்று தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்ய செய்ய பலன் கிடைக்கும் நாள் நெருங்கி வரும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.