ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 324

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

மனதை வலுவாக்குதலே இந்த உலகிலே முதல் பணியாக மனிதனுக்கு இருக்க வேண்டும். வேண்டுமே வெறும் புலன் இன்பமும் அல்லது அதனைத் தாண்டிய எந்த இன்பமும் ஒரு மனிதனுக்குத் தொடர்ந்து அமைந்தால் அதன் பிறகு சிறு கவலையும் சிறு பிரச்சினையும் அவனை சாய்த்து விடும். மாறாக மாறி மாறி துன்பங்களும் கஷ்டங்களும் ஒரு மனிதனை தாக்க தாக்க சில காலத்தில் இவற்றையே பயிற்சியாக இவன் மேற்கொள்ள மேற்கொள்ள மனம் உறுதி பெற்று ஒரு கட்டத்திலே மிகப் பெரிய துன்பம் வரும் போது கூட அவன் ஆடாது அசையாது புயலுக்கு நாணல் ஈடு கொடுப்பது போல ஈடு கொடுத்து விடுவான். எனவே மனதை செம்மைப் படுத்துவதே ஆன்மீகத்தின் அடிப்படையாகும். அடித்தளம் ஆகும். மனமது செம்மையாக செம்மையாக யாதொரு பிரச்சினையும் எவ்வித மனிதனுக்கும் இல்லையப்பா. எனவே நிதானம் தெளிவு தெளிந்த சிந்தனை எந்த நிலையிலும் பதட்டமில்லாது முடிவு எடுக்கும் திறன் ஒன்றின் அதிக பட்ச விளைவு என்ன? என்று முன் கூட்டியே சிந்தித்து அதற்கு ஏற்றாற்போல் மனதை தயாராக வைத்துக் கொள்வது எதுவும் நடக்கலாம் எந்த சூழ்நிலையும் வரலாம் என்று ஒரு எதிர்பார்ப்போடு வாழுகின்ற முறை. இது போன்று சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால் ஒரு மனிதனுக்கு எக்காலத்திலும் பிரச்சினைகள் இல்லை.

பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கையைத் தா என்று கேட்பது சிறப்பல்ல. கேட்டாலும் இறை அதை யாருக்கும் வழங்காது. ஏனென்றால் அவ்விதமான அமைப்பு யாருக்கும் இல்லை. தெளிந்த ஞானியும் அல்லது ஞானம் அற்ற மனிதனுக்கும்தான் பிரச்சினை இல்லாதது போல் ஒரு வாழ்க்கை இருக்கும். காரணம் தெளியாத மனிதனுக்கு எதுவும் புரிவதில்லை. தெளிந்த ஞானியோ அனைத்திலுமே தேறி விட்டதால் அவனுக்கு எதுவும் பிரச்சினையாத் தோன்றாது. இந்தக் கருத்தை உன்னிப்பாக கவனித்து மனதிலே ஊன்றிக் கொண்டு விட்டால் மனிதனுக்கு எக்காலத்திலும் எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் துன்பம் என்பது இல்லை. ஒரு மனிதன் உடல் எடுத்ததற்கு மனித முயற்சி என்று எதை வேண்டுமானாலும் செய்யலாம். இதுதான் நடக்கப் போகிறதே என்று எந்த மனிதனையும் நாம் வாளாய் (சும்மா) இருக்க சொல்லவில்லை. சோம்பலாக இருக்க சொல்லவில்லை. அவன் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியின் விளைவு எதுவானாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அவன் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மனம்தான் ஒரு மனிதனுக்கு எக்காலமும் நன்மையைத் தரும். இல்லையென்றால் ஒன்று மாற்றி ஒன்று அவன் மன விருப்பத்திற்கு மாறாக நடக்கும் போது மிகவும் விரக்தியுற்று சோர்வுற்று தன்னிலையை மறந்து மேலும் சிக்கலில் தானாகச் சென்று மாட்டிக் கொள்வான். எனவே ஒரு மனிதன் பதட்டம் குழப்பம் இல்லாமல் எதனையும் நிதானமாக மூன்றாவது பார்வை கொண்டு ஒவ்வொரு பிரச்சினையையும் பார்க்க பார்க்க அவனுக்கு அனைத்துமே தெளிவாகி விடும். அனைத்துமே சிக்கல் அற்றதாகி விடும். இந்தக் கருத்தை மனதில் பதியவைத்தால் என்றும் எக்காலமும் நலமாகும்.

எம்மை நாடும் மனிதர்கள் இன்னும் இன்னும் பக்குவப்பட வேண்டும். இந்தக் கருத்துக்களை உள் வாங்கி வாங்கி அவரவர்கள் சுய ஆய்வு செய்து சித்தர்கள் யாங்களே கூறினாலும் கூட அவற்றிலே மெய்ப்பொருள் எந்த அளவிற்கு இருக்கிறது என்று ஆய்ந்து ஆய்ந்து தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மனம் செம்மையாக வேண்டும். மனம் உயர வேண்டும். மனம் விரிவடைய வேண்டும். மனம் ஆழமாக இருக்க வேண்டும். மனம் மணக்கின்ற மனமாக வேண்டும். அப்பேற்ப்பட்ட மனதிலேதான் இறை வந்து அமரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 323

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

பிரார்த்தனைகளும் தர்மங்களும் பலன் தரவில்லை என்றால் குறை அதனை செய்கின்ற மாந்தனிடம் (மனிதனிடம்) உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அறியுங்கால் முன்ஜென்ம வினையின் தாக்கம் அதிகம் உண்டு. அது குறித்து அவன் செய்யும் பிரார்த்தனைகளின் அளவு போதவில்லை தர்மங்களின் அளவு போதவில்லை என்பது பொருளாம். அல்லது இன்னும் சில காலம் கழித்து கிட்டப்போகும் நன்மைக்கு முன்னரே சில தீமைகள் போல் தோன்றுகின்ற நன்மைகளும் தீமைகளாய் மாற்றி இறை தருகின்றது என்பது பொருளாகும். எது எங்ஙனம் ஆயினும் இந்த உலகில் நிலவுகின்ற ஒவ்வொரு சம்பவமும் அவனவன் மன நிலையைப் பொறுத்தே அமைவது ஆகுமப்பா. அப்பனே இன்பம் என்ற ஒன்றை மனம் தேடும் பொழுதே அதன் மறுபக்கம் துன்பம் என்ற ஒன்று உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். துன்பம் என்ற ஒன்று வரும் பொழுதே அதன் மறுபக்கம் இன்பம் என்ற ஒன்று வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமப்பா இவை இரண்டும் வேண்டாத உள்ளம் வேண்டுமப்பா. மனம் சமநிலையில் இருக்குங்கால் யாதொரு தொல்லையும் இல்லை. விளம்புங்கால் நிதம் நிதம் ஆயிரம் ஆயிரம் விபத்துக்கள் நிதம் நிதம் ஆயிரம் கஷ்டங்கள். விளம்புவோம். நிதம் நிதம் எத்தனையோ மனிதர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள். வரியுங்கால் அதனை எல்லாம் எண்ணி அந்தப் பிரச்சினைகளை சாராத மனிதன் என்றாவது கலங்கி இருக்கிறானா? கவலைப்படுகிறானா? இல்லை. அதனை போலத்தான் ஒவ்வொரு மனிதனும் தனக்கு துன்பங்கள் வரும்போது மட்டும் கலங்குகின்ற நிலையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். வேண்டுமே மன உறுதி பெற உறுதி பெற எந்த பிரச்சனையும் பிரச்சினையாகத் தோன்றாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 322

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

மனிதர்களை எதற்காக சித்தர்கள் நடமாட விட வேண்டும்? கட்டுப்படுத்தக் கூடாதா? என்ற ஐயம் பலருக்கு இருந்தாலும் கூட இந்த உலகிலே இறை நாமத்தை வைத்து ஏமாற்றுகின்றார்கள். இன்னும் பல்வேறு நிலைகளில் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். எனவே இவையெல்லாம் உலக இயக்கத்திற்கு கர்மக் கழிவிற்கு கர்ம பாவங்களின் பரிவர்த்தனைக்கு என்று இறைவனால் அந்தந்த மனிதனின் பூர்வீக வினைகளால் கொடுக்கப் படுவதாகும். எனவே உலகம் இயங்குவதற்கு எல்லா வகையான குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களும் கர்மக் கழிவிற்காக தேவைப்படுகிறார்கள். எங்ஙனம் மின் சக்தியானது முழுமையாக பயன்பட வேண்டுமென்றால் அதற்கு நேர் மற்றும் எதிர் விளைவுகளைக் கொண்ட இருமுனை இணைப்பு தேவைப்படுகிறதோ அது போலத்தான் இந்த உலகிலே நல்லோரும் தீயோரும் இருக்கிறார்கள். ஒரு நல்லவனை ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால் நல்லவனின் பாவத்தை எடுத்துக் கொண்டு அது போக தீயவனிடம் இருக்கக் கூடிய சிறிதளவு புண்ணியத்தை அவன் நல்லவனுக்குத் தருகிறான் என்பதே பொருள். இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு இந்த உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகி விட்டால் அனைத்தும் மிக எளிதாக மிக நீதியாகத் தோன்றும்.

தெய்வ சாந்நித்யம் என்பது ஆத்மார்த்தமான பக்தியினால் வருவதாகும். அது புறத்தை பொறுத்தது அல்ல. எனவே எந்த ஆலயத்திலும் மனம் ஒன்றி மனதிலே எந்த விதமான தீய எண்ணங்களும் எழாமல் வைராக்கியம் கொண்டு மனதைத் தெளிவாக வைத்து மனதை பக்தியிலே ஆழ்த்தி மனதை பரிபூரண சரணாகதியிலே வைத்து வேறு உலக சிந்தனை ஏதும் எழா வண்ணம் இறையை இல்லத்தில் இருந்து பூஜித்தாலும் அது நல்ல உள்ளத்தில் இருந்து வரும் பூஜையாக இருக்குங்கால் இறைவனின் அருளும் இறைவனின் சாந்நித்யம் கிட்டும் அப்பா. இதுபோல நிலையிலே இறைவனின் அருளாசி நிச்சயம் நிச்சயம் நிச்சயம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 321

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

நாடிகளை (ஜீவநாடி) நம்பி வாழ்கின்றார்கள் பலர். சாதாரண மனிதர்கள் நாடிகளை நாடும் தருணம் நாடிகளில் வருகின்ற கருத்துக்கள் பல தருணம் மெய்யாகி விடுகிறது. பல வேளைகளில் பொய்யாகி விடுகிறது. பொய்யாகும் போது மனிதனுக்கு சோர்வும் விரக்தியும் சினமும் ஏற்பட்டுவிடுகிறது. ஒரு மனிதன் நம்மை ஏமாற்றிவிட்டான். சித்தர்கள் நாமத்தை வைத்து பொய்யாக வாக்கு உரைத்து நம் தனத்தையும் நம் காலத்தையும் வீணாக்கி விட்டான் என்ற சினம் பலருக்கும் வருவது இயல்புதான். இது குறித்து பலருக்கும் யாம் கூறுவது என்னவென்றால் எவன் ஒருவன் ஏமாறுகிறானோ அவன் யாரையோ முன் ஜென்மத்தில் ஏமாற்றி இருக்கிறான் என்பது பொருளாகும். எந்த வகையில் ஏமாறுகிறானோ அந்த வகையில் பிறரை ஏமாற்றி இருக்கிறான் என்பது பொருள்.

இன்னொன்று ஒருவனின் முன் ஜென்ம பாவங்களையெல்லாம் ஒருவன் கழிக்க வேண்டும் என்றால் அவன் முழுக்க முழுக்க துன்பங்களை அனுபவித்துதான் கழிக்க வேண்டும் என்பதில்லை. அவன் நேர்மையாக ஈட்டிய பொருளை அவன் அறியாமல் எவனொருவன் அவனை வஞ்சித்து ஏமாற்றி விடுகிறானோ அப்படி அவன் இழந்த பொருள் மூலம் அவனின் முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் மெல்ல மெல்ல குறைகிறது. எனவே நாங்கள் அடிக்கடி கூறுவது போல ஏமாற்றம் என்பதே இந்த உலகில் ஏதுமில்லை. விழிப்புணர்வோடு வாழட்டும். உள்ளத் தெளிவோடு வாழட்டும். அறிவு தெளிவோடு வாழட்டும். ஆனாலும் அதனையும் தாண்டி ஒரு சக மனதினால் ஒரு சக அமைப்பால் ஏமாற்றப்படுகிறான் என்றால் இதுபோல் அங்கு ஏமாற்றுவது என்பது அவனின் முன் ஜென்ம பாவங்களை. எனவே ஏமாறுவது என்பது ஒரு வகையான பாவக்கழிவு என்று எடுத்துக் கொண்டு விட்டால் உலகில் ஏமாற்றம் குறித்து எந்த நிலையிலும் யாரும் வருத்தம் கொள்ளத் தேவையில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 320

அகத்தியர் மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் அருளைக் கொண்டு இயம்புவது யாதெனில் இதுபோல் ஜீவ அருள் ஓலையிலே முக்காலத்தையும் உணரக் கூடிய எம்மால் (அகத்திய மாமுனிவர்) வருகின்ற மனிதரின் கடந்த காலங்கள் நிகழ் காலங்கள் எதிர் காலங்கள் சம்பவங்கள் மனதில் ஓடுகின்ற எண்ணங்கள் அனைத்தையும் அறுதியிட்டு உறுதியாகக் கூற இயலும். இங்கு வருகின்ற மனிதர்கள் ஐயப்படுகிறார்கள் என்பதற்காக நாங்கள் ஒரு பொழுதும் சினம் கொள்வதில்லை. ஏன் என்றால் சித்தர்களின் நாமத்தை வைத்து மனிதர்களை ஏமாற்றுகின்ற கூட்டமும் இங்கு இருப்பதால் சித்தர்களை நம்புகின்ற அனைவருமே சித்தர்கள் நாமத்தை வைத்து ஓதும் வாக்குகள் அனைத்தையும் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதுபோல் நிலையிலே இதுபோல் வாக்கை நம்ப வேண்டும் என்றால் வருகின்ற மனிதன் மனம் விரும்பும் வண்ணம் அவனுடைய மனம் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் எதாவது உரைத்தால்தான் நம்ப இயலும் என்பது சராசரி மனிதனின் சிந்தனை. மனிதர்கள் இவ்வாறு எண்ணிக் கொண்டு வருவதைக் குறித்து எமக்கு எவ்விதமான சினமோ அல்லது வருத்தமோ இல்லை. ஆனாலும் கூட ஒரு மனிதன் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்கிறானா? அதைப் போலத்தான் மகான்களும். இன்னும் புரிவது போல கூறுவது என்றால் ஒரு மனிதன் தன் மனைவியிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு. சகோதரியிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு தாயிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு தந்தையிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு பிள்ளைகளிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு சக ஊழியர்களிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு. மேலதிகாரியிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு.

ஒரே மனிதன்தான். ஒரே விதமான குணங்கள் கொண்டவன்தான். ஆனால் இடம் பார்த்து சூழல் பார்த்து உறவு நிலை பார்த்து மனிதர்கள் பழகுவது போல நாங்கள் ஞானிகள் என்றாலும் இந்த இடத்தில் இந்த ஜீவ அருள் ஓலையிலே எமை நாடுகின்ற மனிதன் எம்முன்னே அமரும் போது அவனுக்கு யாது உரைக்க வேண்டும்? என்று இறை எமக்கு கட்டளை இடுகிறதோ அதைத்தான் யாம் உரைக்கிறோம். யாம் (அகத்திய மாமுனிவர்) உணர்ந்ததை எல்லாம் யாம் ஞான திருஷ்டியில் பார்த்ததை எல்லாம் உரைக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னொன்று இந்த சுவடியை ஓதுகின்ற மனிதனின் புண்ணிய பலன் இங்கு பார்க்க வருகின்ற மனிதரின் புண்ணிய பலன் அவனின் பரந்த பக்தி நிலை அவன் செய்து வரும் தர்மகாரியங்கள் இவற்றை வைத்துதான் எமது வாக்கின் போக்கு இருக்குமே தவிர உரைப்பது சித்தர்கள் தான் என்று நம்பும் வண்ணம் வாக்கை உரைத்தால்தான் நாங்கள் நம்புவோம் என்று மனிதர்கள் வந்ததற்காக நாங்கள் எதனையும் கூறிவிட இயலாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 319

அகத்தியர் மாமுனிவரின் பொது வாக்கு:

விதி கர்மா பாவம் புண்ணியம் இறை நவகிரகம் நாள் நட்சத்திரம் வாக்கு இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு பார்க்குங்கால் இறை நம்பிக்கை இல்லாத எத்தனையோ மனிதர்கள் தாங்கள் மேற்கொண்ட தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இறை வழிபாடும் இல்லாமல் நல்ல எண்ணங்களும் இல்லாத சில மனிதர்கள் தொழிலில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? ஈடுபாடு. ஒரு தொழிலை எப்படி செய்ய வேண்டும்? என்று மனிதனுக்கு மனிதன் வித்தியாசமான கருத்துக்கள் உண்டு. இவைகளில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளும் உண்டு. இது ஒரு புறமிருக்க ஒரு மனிதன் சுய தொழில் செய்வதாகக் கொள்வோம். அவன் அந்தத் தொழில் குறித்த ஞானத்தை குறைந்த பட்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும். அன்றாடம் தொழில் பற்றிய மாறுதல்களை அவன் அறிந்து கொள்ள வேண்டும். நல்லவனாக இருந்தாலும் திறமை இல்லாது போனால் அந்தத் தொழில் அவனை கைவிட்டு விடும். தொழில் திறமையோடு தசத்திலே (தொழிலேயே) ஈடுபாட்டையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தசம் பற்றிய நுணுக்கங்களையும் நாளுக்கு நாள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த தசத்திலே (தொழிலிலே) நாம் அமர்ந்திருக்கிறோமோ அந்த தசத்தை (தொழிலை) நாடி வரும் மாந்தன் (மனிதன்) திருப்தி அடையா விட்டால் அதிலே வெற்றி பெற முடியாது. இதோடு தசத்தின் (தொழிலின்) தேவை வரும் சமயம் அந்த மனிதன் விரும்பும் வண்ணம் தசத்தின் (தொழிலின்) தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

வருகின்ற மாந்தன் (மனிதன்) அரைகுறை அறிவோடுதான் வருவான். எரிச்சல் மூட்டுவதாகத்தான் வினவுவான். நீ பொறுமை காக்க வேண்டும். எனவே ஈடுபடும் தொழில் பிடிக்கவில்லை என்றால் உடனடியாக தொழிலை மாற்றிக் கொள்ள வேண்டும். தொழிலை மாற்ற மாட்டேன். கவனத்தையும் சிதற விடுவேன் என்றால் அதனால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஈடுபாடு இல்லாமல் செய்யக் கூடிய எந்த செயலும் சிறப்பை பெறாது. குறையில்லாத மனிதனைக் காண்பது என்பது மிக மிகக் கடினம். எனவே நம்மிடம் கூடுமானவரை குறையில்லாமல் பார்த்துக் கொண்டு எதிராளிகளைக் கவர்ந்திழுக்கும் கலையைக் கற்றுக் கொண்டு தொழில் செய்ய முற்பட்டால் வெற்றி உண்டாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 318

அகத்தியர் மாமுனிவரின் பொது வாக்கு:

ஒவ்வொரு மனிதனின் மனம் எப்படி? என்பது எமக்குத் தெரியும். ஒவ்வொரு மனிதனையும் இறை சக்தியைக் கொண்டு பக்குவம் அடைந்த மனிதனாக மாற்ற முடியும் என்றாலும் கூட இறைக்கு வேலை அதுவல்ல. அன்னவன் உழன்று சிதிலப்பட்டு பக்குவப்பட்டு வேதனைப்பட்டு கவலைப்பட்டு கஷ்டப்பட்டு தன்னைத் தானே மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்பதுதான் இறையின் எண்ணமாகும். பல்வேறு மாந்தர்களுக்கு (மனிதர்களுக்கு) சிந்தனை செயல் வழியில் அனேக உளைச்சல்கள் வருவது இயல்புதான். முதலில் மனிதன் மனதை தெளிவாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். ஒருவன் கூறுகின்ற யோசனை மற்றவருக்கு நன்மையாக படலாம் அல்லது தீமையாக படலாம். அதைக் கேட்பவனுக்கு எது நன்மையோ அதை பின்பற்ற வேண்டும். பொது நலம் கருதி கூறப்படும் விஷயங்கள் எல்லாம் ஏக ஏக மாந்தனும் (மனிதனும்) பின்பற்றுவது என்பது அவனவன் மனவலிமையைப் பொறுத்தது. பலருக்கும் தன சிக்கல். அன்னை மகாலட்சுமியையும் குபேரனையும் வழிபட உரைத்தால் யாரும் செய்வதில்லை. இதோடு அவரவர் சார்ந்த தொழிலில் முயன்று ஈடுபட நலம் விளையும். தோல்வி பற்றி கலக்கம் கொள்ளாமல் முயற்சியைத் தொடர வேண்டும். வெற்றி நிச்சயம் என்று அறிந்து கொண்டு எவன் ஒருவன் ஈடுபடுகிறானோ அவன் செயல் வீரன் அல்ல. தோல்வி நிச்சயம் என்று தெரிந்த பிறகும் ஈடுபடுவது உசிதமல்ல என்றாலும் தெரியாத நிலையில் முயற்சி செய்வதும் தவறு இல்லை. அந்த நிலையை ஒவ்வொரு மனிதனும் மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

விதி கர்மா பாவம் புண்ணியம் இறை நவக்கிரகம் நாள் நட்சத்திரம் வாக்கு இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பார்க்குங்கால் இறை நம்பிக்கை இல்லாத எத்தனையோ மனிதர்கள் தாங்கள் மேற்கொண்ட தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இறை வழிபாடும் இல்லாமல் நல்ல எண்ணங்களும் இல்லாத சில மனிதர்கள் தொழிலில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? ஈடுபாடு. ஒரு தொழிலை எப்படி செய்ய வேண்டும்? என்று மனிதனுக்கு மனிதன் வித்தியாசமான கருத்துக்கள் உண்டு. இவைகளில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளும் உண்டு. இது ஒரு புறமிருக்க ஒரு மனிதன் சுய தொழில் செய்வதாகக் கொள்வோம். அவன் அந்தத் தொழில் குறித்த ஞானத்தை குறைந்த பட்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும். அன்றாடம் தொழில் பற்றிய மாறுதல்களை அவன் அறிந்து கொள்ள வேண்டும். நல்லவனாக இருந்தாலும் திறமை இல்லாது போனால் அந்தத் தொழில் அவனை கைவிட்டுவிடும். தொழில் திறமையோடு தசத்திலே ஈடுபாட்டையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தசம் பற்றிய நுணுக்கங்களையும் நாளுக்கு நாள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த தசத்திலே நாம் அமர்ந்திருக்கிறோமோ அந்த தசத்தை நாடி வரும் மாந்தன் திருப்தி அடையாவிட்டால் அதிலே வெற்றி பெற முடியாது.

இதோடு தசத்தின் தேவை வரும் சமயம் அந்த மனிதன் விரும்பும் வண்ணம் தசத்தின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். எங்ஙனமென்றால் எந்த தசத்திலே நாம் அமர்ந்திருக்கிறோமோ அந்த தசத்தை நாடி வரும் மாந்தன் திருப்தி அடையாவிட்டால் அதிலே வெற்றி பெற முடியாது. வருகின்ற மாந்தன் அரைகுறை அறிவோடுதான் வருவான். எரிச்சல் மூட்டுவதாகத்தான் வினவுவான். நீ பொறுமை காக்க வேண்டும். உள்ளே வரும் மாந்தர்கள் வந்தோமா? பார்த்தோமா? சென்றோமா? என்று போய்விட்டால் மன உளைச்சல் கிடையாதே? என்று இந்த இதழ் ஓதும் மூடன் எண்ணுகிறான். அது சாத்தியப்படாதப்பா. யாம் ஒரு வரி ஓதி நிறுத்தினால் அதற்கு விளக்கம் இன்னவன் வாயில் இருந்து வந்தால்தான் மனிதர்களின் மனம் சமாதானம் அடைகிறது. காரணம் என்ன தெரியுமா? சிலர் (சரியோ தவறோ) இன்னவன் கூறுவதையெல்லாம் யாங்கள் கூறும் வாக்காக எண்ணுகிறார்கள். அதனால்தான் இவன் பேசும் முன்பு வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறோம். கட்டாயம் ஒன்று நடக்காது என்றாலும் எதிர்மறையாக பேசக்கூடாது. வந்து எதிரே அமர்பவர்களை அதைரியப்படுத்துதலும் கூடாது.

முயற்சி செய்யுங்கள் இறைவனை வணங்குங்கள் என்று ஆறுதலாகப் பேச வேண்டும். இது (குடில்) மனதிற்கு மருந்து போடும் மருத்துவமனை. இங்கெல்லாம் கடுமையான சட்ட திட்டங்கள் செல்லாதப்பா. பசியோடு வருபவர்க்கு அன்னம் அளிக்க வேண்டும். அவன் செல்வந்தனோ? வறியவனோ? மன பாரத்தோடு வரும் மனிதனுக்கு (இதழ் ஒதுபவனுக்கு மன உளைச்சல் இருக்கிறதோ இல்லையோ) அவர்களின் உளைச்சலை இவன் ஏற்றுத்தான் ஆக வேண்டும். நிறைய மனிதர்களுக்கு (இவனிடம்) நிறைய பேசினால்தான் ஒரு (மன) திருப்தி ஏற்படுகிறது. அப்போதுதான் வாக்கு கேட்ட ஒரு தெளிவு ஏற்படுகிறது. இல்லை என்றால் மூத்தோனுக்கு தீபம் ஏற்று. பிறகு வா என்று யாங்கள் பூர்த்தி செய்வோம். அது தொடர்பாக இவன் ஒரு நாழிகையாக பேசினால்தான் வந்தவன் திருப்தி அடைவான். அவன் திருப்தி அடைந்தாலும் அடையாவிட்டாலும் எமக்கு ஒன்றுமில்லை. ஆனால் தொடர்ந்து இதையே தொழிலாகக் கொண்ட இவன் வெற்றி பெற வேண்டுமென்றால் சாமர்த்தியமாகவும் நைச்சியமாகவும் அன்பாகவும் பாசமாகவும் பேசித்தான் ஆகவேண்டும். சித்தர் அருட் குடில் என்ற நாமத்தை நாங்கள் உரைத்த காரணம் என்னவென்றால் அனைவரையுமே குடிலைச் சேர்ந்தவர்களாகத்தான் நாங்கள் வைத்திருக்கிறோம். அந்த வழியில்தான் கூட்டு வழிபாடுகளையும் பிரார்த்தனைகளையும் தொடரச் செய்கிறோம். இது குறித்து சில திட்டங்களை எல்லாம் பிற்காலத்தில் கூறுகிறோம். அதுவரை இங்கு வருகின்ற மனிதர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும். (வருபவன் நல்லவனோ கெட்டவனோ எம்மை புரிந்து கொண்டவனோ புரிந்து கொள்ளாதவனோ இதை நம்புகிறானோ இல்லையோ) அவன் மனம் குளிரும்படி (யாங்கள் வாக்கை உரைத்தாலும் உரைக்காவிட்டாலும்) எமது வாக்கை எடுத்துச் சொல்லும் விதத்திலும் அர்த்தத்தை எடுத்துச் சொல்லும் விதத்திலும் சில நாழிகைகள் இவன் எடுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

விளம்பிடுவோம் மேலும் வருகின்றவனை முழுவதுமாக திருப்திபடுத்துவது எல்லாம் இயலாது. வருபவன் எதை எதையோ எண்ணி வருவான். முரண்டு பிடிப்பான் என்றால் கூடுமானவரை அமைதியாகப் பேச வேண்டியது. அதிலும் அவன் சமாதானம் அடையவில்லைஎன்றால் வந்தவனின் விதி என்று விட்டுவிட வேண்டியதுதான். இத்தனை குறுகிய காலத்திலே இவனுக்கு ஞான சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது என்றாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனையோ ரணங்கள் இருக்கிறது என்றாலும் கூட இன்று இறைவன் அருளைக் கொண்டு யாங்கள் என்ன செய்திருக்கிறோம்? பிற்காலத்தில் என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. இந்த இதழை இறை இன்னும் எத்தனை காலம் இங்கு வைத்திருக்கப் போகிறது? என்று எமக்கும் தெரியாது. இதுபோல் இவன் என்ன வழிபாடு செய்திருக்கிறான்? எத்தனை மந்திர பூஜை செய்திருக்கிறான்? எத்தனை பெரிதாக யாகம் செய்திருக்கிறான்? இவை எல்லாம் உனக்கே (அதாவது அச்சமயம் வாக்கைக் கேட்டுக் கொண்டிருந்தவர்) தெரியும். நாங்கள் இயம்பியதில் 100 இல் 1 பங்கைக்கூட இவன் பூர்த்தி செய்யவில்லை. எனவே எவனிடம் மனிதத் தன்மை இருக்கிறதோ அவனுக்குத்தான் எதிரியிடம் உள்ள நல்ல தன்மைகள் தெரியும் அந்த வழியில் இந்தத் தடம் நடத்தப்படுவதுதான் எமக்கு ஏற்றதாகும். எனவே ஈடுபடும் தொழில் பிடிக்கவில்லை என்றால் உடனடியாக தொழிலை மாற்றிக் கொள்ள வேண்டும். தொழிலை மாற்ற மாட்டேன். கவனத்தையும் சிதற விடுவேன் என்றால் அதனால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஈடுபாடு இல்லாமல் செய்யக் கூடிய எந்த செயலும் சிறப்பை பெறாது. குறையில்லாத மனிதனைக் காண்பது என்பது மிக மிகக் கடினம். 

எனவே நம்மிடம் கூடுமானவரை குறையில்லாமல் பார்த்துக்கொண்டு எதிராளிகளைக் கவர்ந்திழுக்கும் கலையைக் கற்றுக் கொண்டு தொழில் செய்ய முற்பட்டால் வெற்றி உண்டாகும். இறைவனின் அருளைக் கொண்டு இயம்புவது யாதெனில் இதுபோல் ஜீவ அருள் ஓலையிலே முக்காலத்தையும் உணரக்கூடிய எம்மால் வருகின்ற மனிதரின் கடந்த காலங்கள் நிகழ் காலங்கள் எதிர் காலங்கள் சம்பவங்கள் மனதில் ஓடுகின்ற எண்ணங்கள் அனைத்தையும் அறுதியிட்டு உறுதியாகக் கூற இயலும். இதுபோல் இங்கு வருகின்ற மனிதர்கள் ஐயப்படுகிறார்கள் என்பதற்காக நாங்கள் ஒரு பொழுதும் சினம் கொள்வதில்லை. ஏன் என்றால் சித்தர்களின் நாமத்தை வைத்து மனிதர்களை ஏமாற்றுகின்ற கூட்டமும் இங்கு இருப்பதால் சித்தர்களை நம்புகின்ற அனைவருமே சித்தர்கள் நாமத்தை வைத்து ஓதும் வாக்குகள் அனைத்தையும் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதுபோல் நிலையிலே இதுபோல் வாக்கை நம்ப வேண்டும் என்றால் வருகின்ற மனிதன் மனம் விரும்பும் வண்ணம் அவனுடைய மனம் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் ஏதாவது உரைத்தால்தான் நம்ப இயலும் என்பது சராசரி மனிதனின் சிந்தனை. மனிதர்கள் இவ்வாறு எண்ணிக் கொண்டு வருவதைக் குறித்து எமக்கு எவ்விதமான சினமோ அல்லது வருத்தமோ இல்லை.

ஆனாலும் கூட ஒரு மனிதன் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்கிறானா? அதைப் போலத்தான் மகான்களும். இன்னும் புரிவதுபோல் கூறுவது என்றால் ஒரு மனிதன் தன் மனைவியிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு சகோதரியிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு தாயிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு தந்தையிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு பிள்ளைகளிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு சக ஊழியர்களிடம் நடந்து கொள்கின்ற வேறு மேலதிகாரியிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு. ஒரே மனிதன்தான். ஒரே விதமான குணங்கள் கொண்டவன்தான். ஆனால் இடம் பார்த்து சூழல் பார்த்து உறவு நிலை பார்த்து மனிதர்கள் பழகுவது போல நாங்கள் ஞானிகள் என்றாலும் இந்த இடத்தில் இந்த ஜீவ அருள் ஓலையிலே எமை நாடுகின்ற மனிதன் எம்முன்னே அமரும்போது அவனுக்கு யாது உரைக்க வேண்டும்? என்று இறை எமக்கு கட்டளை இடுகிறதோ அதைத்தான் யாம் உரைக்கிறோம். யாம் உணர்ந்ததை எல்லாம் யாம் ஞான திருஷ்டியில் பார்த்ததை எல்லாம் உரைக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னொன்று இந்த சுவடியை ஓதுகின்ற மனிதனின் புண்ணிய பலன் இங்கு பார்க்க வருகின்ற மனிதரின் புண்ணிய பலன். அவனின் பரந்த பக்தி நிலை அவன் செய்து வரும் தர்மகாரியங்கள் இவற்றை வைத்துதான் எமது வாக்கின் போக்கு இருக்குமே தவிர உரைப்பது சித்தர்கள் தான் என்று நம்பும் வண்ணம் வாக்கை உரைத்தால்தான் நாங்கள் நம்புவோம் என்று மனிதர்கள் வந்ததற்காக நாங்கள் எதனையும் கூறிவிட இயலாது.

நாடிகளை நம்பி வாழ்கின்றார்கள் பலர் சாதாரண மனிதர்கள் அதுபோல் நாடிகளை நாடும் தருணம் நாடிகளில் வருகின்ற கருத்துக்கள் பல தருணம் மெய்யாகி விடுகிறது. பல வேளைகளில் பொய்யாகி விடுகிறது. பொய் ஆகும்போது மனிதனுக்கு சோர்வும் விரக்தியும் சினமும் ஏற்பட்டு விடுகிறது. ஒரு மனிதன் நம்மை ஏமாற்றி விட்டான். சித்தர்கள் நாமத்தை வைத்து பொய்யாக வாக்கு உரைத்து நம் தனத்தையும் நம் காலத்தையும் வீணாக்கி விட்டான் என்ற சினம் பலருக்கு வருவது இயல்புதான். இது குறித்து பலருக்கும் யாம் கூறுவது என்னவென்றால் எவன் ஒருவன் ஏமாறுகிறானோ அவன் யாரையோ முன் ஜென்மத்தில் ஏமாற்றி இருக்கிறான் என்பது பொருளாகும். எந்த வகையில் ஏமாறுகிறானோ அந்த வகையில் பிறரை ஏமாற்றி இருக்கிறான் என்பது பொருள். இன்னொன்று ஒருவனின் முன் ஜென்ம பாவங்களையெல்லாம் ஒருவன் கழிக்க வேண்டும் என்றால் அதுபோல் அவன் முழுக்க முழுக்க துன்பங்களை அனுபவித்துதான் கழிக்க வேண்டும் என்பதில்லை. அவன் நேர்மையாக ஈட்டிய பொருளை அவன் அறியாமல் எவனொருவன் அவனை வஞ்சித்து ஏமாற்றி எடுக்கிறானோ அப்படி அவன் இழந்த பொருள் மூலம் அவனின் முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் மெல்ல மெல்ல குறைகிறது. எனவே நாங்கள் அடிக்கடி கூறுவது போல ஏமாற்றம் என்பதே இந்த உலகில் ஏதுமில்லை. விழிப்புணர்வோடு வாழட்டும். உள்ளத் தெளிவோடு வாழட்டும். அறிவு தெளிவோடு வாழட்டும். ஆனாலும் அதனையும் தாண்டி ஒரு சக மனதினால் ஒரு சக அமைப்பால் ஏமாற்றப்படுகிறான் என்றால் அதுபோல் அங்கு ஏமாற்றுவது என்பது அவனின் முன் ஜென்ம பாவங்களே. எனவே ஏமாறுவது என்பது ஒருவகையான பாவக் கழிவு என்று எடுத்துக் கொண்டு விட்டால் உலகில் ஏமாற்றம் குறித்து எந்த நிலையிலும் யாரும் வருத்தம் கொள்ளத் தேவையில்லை.

இதுபோல் மனிதர்களை எதற்காக சித்தர்கள் நடமாட விட வேண்டும்? கட்டுப்படுத்தக் கூடாதா? என்ற ஐயம் பலருக்கு இருந்தாலும் கூட இந்த உலகிலே இறை நாமத்தை வைத்து ஏமாற்றுக்கின்றார்கள். இன்னும் பல்வேறு நிலைகளில் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். எனவே இவையெல்லாம் உலக இயக்கத்திற்கு கர்மக் கழிவிற்கு கர்ம பாவங்களின் பரிவர்த்தனைக்கு என்று இறைவனால் அந்தந்த மனிதனின் பூர்வீக வினைகளால் கொடுக்கப்படுவதாகும். எனவே உலகம் இயங்குவதற்கு எல்லா வகையான குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களும் கர்மக் கழிவிற்காக தேவைப்படுகிறார்கள். அதுபோல் எங்ஙனம் மின் சக்தியானது முழுமையாக பயன்பட வேண்டுமென்றால் அதற்கு நேர் மற்றும் எதிர் விளைவுகளைக் கொண்ட இருமுனை இணைப்பு தேவைப்படுகிறதோ இதுபோலத்தான் இந்த உலகிலே நல்லோரும் தீயோரும் இருக்கிறார்கள். ஒரு நல்லவனை ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால் நல்லவனின் பாவத்தை எடுத்துக் கொண்டு அது போக தீயவனிடம் இருக்கக்கூடிய சிறிதளவு புண்ணியத்தை அவன் நல்லவனுக்குத் தருகிறான் என்பதே பொருள். இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு இந்த உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகி விட்டால் அனைத்தும் மிக எளிதாக மிக நீதியாகத் தோன்றும். தெய்வ சாந்தித்யம் என்பது ஆத்மார்த்தமான பக்தியினால் வருவதாகும். அது புறத்தை பொறுத்தது அல்ல. எனவே எந்த ஆலயத்திலும் மனம் ஒன்றி மனதிலே எந்த விதமான தீய எண்ணங்களும் எழாமல் வைராக்கியம் கொண்டு மனதைத் தெளிவாக வைத்து மனதை பக்தியிலே ஆழ்த்தி மனதை பரிபூரண சரணாகதியிலே வைத்து வேறு உலக சிந்தனை எதும் எழா வண்ணம் இறையை இல்லத்தில் இருந்து பூஜித்தாலும் அது நல்ல உள்ளத்தில் இருந்து வரும் பூஜையாக இருக்குங்கால் இறைவனின் அருளும் இறைவனின் சாந்நித்யம் கிட்டுமப்பா. இதுபோல் நிலையிலே இறைவனின் அருளாசி நிச்சயம் நிச்சயம் நிச்சயம்.

ஆகுமப்பா பிரார்த்தனைகளும் தர்மங்களும் பலன் தரவில்லை என்றால் அதுபோல் குறை அதனை செய்கின்ற மாந்தனிடம் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதுபோல் அறியுங்கால் முன்ஜென்ம வினையின் தாக்கம் அதிகம் உண்டு. அது குறித்து அவன் செய்யும் பிரார்த்தனைகளின் அளவு போதவில்லை தர்மங்களின் அளவு போதவில்லை என்பது பொருளாம். அல்லது இன்னும் சில காலம் கழித்து கிட்டப்போகும் நன்மைக்கு முன்னரே சில தீமைகள் போல் தோன்றுகின்ற நன்மைக்ளும் தீமைகளாய் மாற்றி இறை தருகின்றது என்பது பொருளாகும். எது எங்ஙனம் ஆயினும் இந்த உலகில் நிலவுகின்ற ஒவ்வொரு சம்பவமும் அவனவன் மனநிலையைப் பொறுத்தே அமைவது ஆகுமப்பா. அப்பனே இன்பம் என்ற ஒன்றை மனம் தேடும் பொழுதே அதன் மறுபக்கம் துன்பம் என்ற ஒன்று உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். துன்பம் என்ற ஒன்று வரும்பொழுதே அதன் மறுபக்கம் இன்பம் என்ற ஒன்று வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமப்பா இவை இரண்டும் வேண்டாத உள்ளம் வேண்டுமப்பா. மனம் சம நிலையில் இருக்குங்கால் யாதொரு தொல்லையும் இல்லை. விளம்புங்கால் நிதம் நிதம் ஆயிரம், ஆயிரம் விபத்துக்கள். நிதம் நிதம் ஆயிரம் கஷ்டங்கள். விளம்புவோம். நிதம் நிதம் எத்தனையோ மனிதர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள். வரியுங்கால் அதனையெல்லாம் எண்ணி அந்த பிரச்சினைகளை சாராத மனிதன் என்றாவது கலங்கி இருக்கிறானா? கவலைப்படுகிறானா? இல்லை. அதனை போலத்தான் ஒவ்வொரு மனிதனும் தனக்கு துன்பங்கள் வரும்போது மட்டும் கலங்குகின்ற நிலையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். வேண்டுமே மனம் உறுதி பெற, உறுதி பெற எந்த பிரச்சினையும் பிரச்சினையாகத் தோன்றாது.

மனதை வலுவாக்குதலே. இந்த உலகிலே முதல் பணியாக மனிதனுக்கு இருக்க வேண்டும். வேண்டுமே, வெறும் புலன் இன்பமும் அல்லது அதனைத் தாண்டிய எந்த இன்பமும் ஒரு மனிதனுக்குத் தொடர்ந்து அமைந்தால், அதன் பிறகு சிறு கவலையும், சிறு பிரச்சினையும் அவனை சாய்த்து விடும். மாறாக, மாறி, மாறி துன்பங்களும், கஷ்டங்களும் ஒரு மனிதனை தாக்க, தாக்க, சில காலத்தில் இவற்றையே பயிற்சியாக இவன் மேற்கொள்ள, மேற்கொள்ள, மனம் உறுதி பெற்று, ஒரு கட்டத்திலே மிகப் பெரிய துன்பம் வரும்போது கூட, அவன் ஆடாது, அசையாது, புயலுக்கு நாணல் ஈடு கொடுப்பது போல ஈடு கொடுத்து விடுவான். எனவே, மனதை செம்மைப்படுத்துவதே ஆன்மீகத்தின் அடிப்படையாகும், அடித்தளம் ஆகும். மனமது செம்மையாக, செம்மையாக, யாதொரு பிரச்சினையும் எவ்வித மனிதனுக்கும் இல்லையப்பா. எனவே நிதானம் தெளிவு தெளிந்த சிந்தனை எந்த நிலையிலும் பதட்டமில்லாது முடிவு எடுக்கும் திறன் ஒன்றின் அதிக பட்ச விளைவு என்ன? என்று முன் கூட்டியே சிந்தித்து அதற்கு ஏற்றாற்போல் மனதை தயாராக வைத்துக் கொள்வது எதுவும் நடக்கலாம் எந்த சூழ்நிலையும் வரலாம் என்று ஒரு எதிர்பார்ப்போடு வாழுகின்ற முறை. இது போன்று சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால் ஒரு மனிதனுக்கு எக்காலத்திலும் பிரச்சினைகள் இல்லை.

பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கையைத் தா என்று கேட்பது சிறப்பல்ல. கேட்டாலும் இறை அதை யாருக்கும் வழங்காது. ஏனென்றால் அவ்விதமான அமைப்பு யாருக்கும் இல்லை. தெளிந்த ஞானியும் அல்லது ஞானம் அற்ற மனிதனுக்கும்தான் பிரச்சினை இல்லாதது போல் ஒரு வாழ்க்கை இருக்கும். காரணம் தெளியாத மனிதனுக்கு எதுவும் புரிவதில்லை. தெளிந்த ஞானியோ அனைத்திலுமே தேறி விட்டதால் அவனுக்கு எதுவும் பிரச்சினையாகத் தோன்றாது. இந்தக் கருத்தை உன்னிப்பாக கவனித்து மனதிலே ஊன்றிக் கொண்டு விட்டால் மனிதனுக்கு எக்காலத்திலும் எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் துன்பம் என்பது இல்லை. ஒரு மனிதன் உடல் எடுத்ததற்கு மனித முயற்சி என்று எதை வேண்டுமானாலும் செய்யலாம். இதுதான் நடக்கப் போகிறதே என்று எந்த மனிதனையும் நாம் வாளாய் (சும்மா) இருக்க சொல்லவில்லை. சோம்பலாக இருக்க சொல்லவில்லை. அவன் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியின் விளைவு எதுவானாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அவன் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மனம்தான் ஒரு மனிதனுக்கு எக்காலமும் நன்மையைத் தரும். இல்லையென்றால் ஒன்று மாற்றி ஒன்று அவன் மன விருப்பத்திற்கு மாறாக நடக்கும்போது மிகவும் விரக்தியுற்று சோர்வுற்று தன்னிலையை மறந்து மேலும் சிக்கலில் தானாகச் சென்று மாட்டிக் கொள்வான். எனவே ஒரு மனிதன் பதட்டம் குழப்பம் இல்லாமல் எதனையும் நிதானமாக மூன்றாவது பார்வை கொண்டு ஒவ்வொரு பிரச்சினையையும் பார்க்க பார்க்க அவனுக்கு அனைத்துமே தெளிவாகி விடும். அனைத்துமே சிக்கல் அற்றதாகி விடும். இந்தக் கருத்தை மனதில் பதியவைத்தால் என்றும் எக்காலமும் நலமாகும்.

எம்மை நாடும் மனிதர்கள் இன்னும் இன்னும் பக்குவப்பட வேண்டும். இந்தக் கருத்துக்களை உள் வாங்கி வாங்கி அவரவர்கள் சுய ஆய்வு செய்து சித்தர்கள் யாங்களே கூறினாலும் கூட அவற்றிலே மெய்ப்பொருள் எந்த அளவிற்கு இருக்கிறது என்று ஆய்ந்து ஆய்ந்து தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மனம் செம்மையாக வேண்டும். மனம் உயர வேண்டும். மனம் விரிவடைய வேண்டும். மனம் ஆழமாக இருக்க வேண்டும். மனம் மணக்கின்ற மனமாக வேண்டும். அப்பேற்ப்பட்ட மனதிலேதான் இறை வந்து அமரும் ஆசிகள் சுபம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 317

அகத்தியர் மாமுனிவரின் பொது வாக்கு:

எம்மை நாடும் மாந்தர்களின் (மனிதர்களின்) பூர்வீக பாவங்கள் குறையும் பொருட்டு யாங்கள் (சித்தர்கள்) பல விதமான வழி முறைகளை கூறுகிறோம். இதுபோல் வழி முறைகளில் தர்மங்களும் தல யாத்திரைகளும் இல்லத்தில் அமைதியாக அமர்ந்து செய்யக்கூடிய பிரார்த்தனைகளும் யாகங்களும் ஆகும். இதுபோல் நிலையிலே எதையும் எத்தருணமும் நாங்கள் எக்காலத்தும் எஞ்சான்றும் கட்டாயப் படுத்துவதில்லை. ஆயினும் கூட இதனை மேற்கொண்டால் ஒரு மனிதனின் வாழ்வு மெல்ல மெல்ல பாவங்களில் இருந்து விடுபட்டு மேன்மையை நோக்கி செல்வதற்கு உண்டான வாய்ப்பு இருக்கும் என்பதை யாம் சுட்டி காட்டுகிறோம்.

அதுபோல் சித்தர்கள் வழியில் வருகின்ற மாந்தர்களுக்கு (மனிதர்களுக்கு) அல்லது யாங்கள் கூறுகின்ற நெறிமுறைகளை இந்த சுவடியைப் (ஜீவநாடி) பார்க்காமலேயே பூர்வ புண்ணியத்தின் காரணமாக இயல்பாகவே செயல்பட்டு கொண்டு இருக்கின்ற மனிதன் அதாவது மனிதநேயம் அன்பு கருணை பெருந்தன்மை சகிப்புத்தன்மை பொறுமை விடாமுயற்சி நேர்மையான உழைப்பு சுயநலமற்ற தன்மை பரோபகார சிந்தனை தளராத பக்தி தடைபடாத தர்மம் இவற்றையெல்லாம் எவனொருவன் தொடர்ந்து பின்பற்றுகிறானோ அவனுக்கு இறைவன் அருள் என்பது தொடர்ந்து தடையற்று வந்து கொண்டே இருப்பதோடு அவன் இறைவனை தேடி எங்கும் செல்ல வேண்டாம். அவன் எங்கிருந்தாலும் இறைவனின் அருள் ஆற்றல் அவனை வழிநடத்தும். இதுபோல் யாங்களும் (சித்தர்களும்) அவனை வழி நடத்துவோம். இதுபோல் நலமே நடக்கும் என்று இறைவன் அருளால் யாம் நல்லாசி கூறுகிறோம் ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 316

அகத்தியர் மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் காலகாலம் மாந்தனவன் (மனிதனவன்) தம்தம் உலக வாழ்வில் எதிர்ப்படும் இன்னல்களைத் தீர்த்து கொள்ளவும் இன்னும் மேலோங்கி வாழவும் அல்லது இறைவனின் அருளைப் பெற்று இறை வழியில் செல்வதற்கும் தாம்தாம் அறிந்த வழிமுறைகளை எல்லாம் முயற்சி செய்து பார்க்கின்றான். அதுபோல் நிலையிலே ஒரு பிறவி என்னும் அந்தப் பிறவிக்குள்ளே வாழ்ந்து பூர்த்தி அடைவது என்பது மனிதப் பார்வையில் ஏற்புடையதாக இருந்தாலும் மகான்கள் பார்வையிலே பிறவி சுழற்சி என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இது போல் ஒரு மனிதனுக்கு நடப்பு பிறவியின் சில சம்பவங்கள் மட்டுமே நினைவில் இருப்பதால் அதற்கு முன்னும் பின்னும் யாது நிகழ்ந்தது அல்லது நிகழப் போகிறது என்பது அறியாமல் இருக்கிறான். இந்த அறியாமையின் உச்ச கட்டத்தில் தான் மனம் தடுமாறி வெறும் புலன் உணர்வுகளுக்கு ஆட்படுத்தி தன்னுடைய தேகம் சார்ந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் தந்து அதை நோக்கியே செல்வதால் தான் மனிதனுக்கு அவன் விரும்பாத நிகழ்வுகளெல்லாம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்து ஒரு மனிதன் சதா சர்வகாலம் இறைவன் அருளைப் பெறுவதற்கு உண்டான வழிமுறை என்ன என்ன என்று மகான்களும் ஞானிகளும் சிந்தித்து இறைவன் அருளாலே பல்வேறு விதமான போதனைகள் எல்லாம் அவ்வப்பொழுது மனித குலத்திற்கு அருளி இருக்கிறார்கள். ஆனாலும் கூட மனிதன் அவனுடைய மனநிலை பக்குவம் எல்லாவற்றையும் விட அவன் ஜாதகத்தில் உள்ள கிரகத்தின் நிலை இவற்றை பொறுத்தே தான் உயர்ந்த தெய்வீக விஷயங்களையும் மற்ற ஞான கருத்துக்களையும் அவனால் உள்வாங்கி ஏற்றுக் கொள்ள இயலும். உள்வாங்கி ஏற்றுக் கொண்டாலும் நடைமுறைப் படுத்துவது என்பது அவனுடைய பூர்வ புண்ணியத்தின் அளவைப் பொறுத்ததே. இந்த நிலையில் பல்வேறு விதமான இந்த உலக வாழ்வின் போராட்டங்களுக்கு இடையே யாங்கள் (சித்தர்கள்) இறை வழி செல்வதற்கு உண்டான நெறிமுறைகளை எல்லாம் கூறினால் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நடைமுறைப் படுத்துவது என்பது கடினம் என்பது தான் பல மனிதர்களின் வாதமாகவும் அல்லது இவைகளையெல்லாம் செய்யாமலேயே எத்தனையோ மனிதர்கள் நன்றாகத்தானே வாழ்கிறார்கள். அப்படியிருக்க இதனை ஏன் நாங்கள் மட்டும் செய்ய வேண்டும் என்று சில மனிதர்களும் இப்படி பல்வேறு விதமான விவாதங்களில் இறங்குவதற்கு உண்டான சூழல் தான் இருந்து வருகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 315

அகத்தியர் மாமுனிவரின் பொது வாக்கு:

செம்பிலே உள்ள களிம்பை நீக்கி விட்டால் செம்பு தன்னால் ஔிர்வது போல ஒவ்வொரு ஆத்மாவிற்கும் பூர்வீகத்தில் அது எந்த பரமாத்மாவில் இருந்து பிரிந்து வந்ததோ அந்த ஆத்மாவின் சாயல் இருக்கும். ஆனால் ஆசா பாசங்களும் கர்மங்களும் மாயைகளும் மூடியிருப்பதால் அது உணர்வது இல்லை. இவற்றை உணர தொடங்கும் போது உலகியல் அதை உணர விடாது செய்யும். அதை மீறிச் செல்வதற்கு மனத்துணிவு வேண்டும். மன ஆற்றலை திடத்தை தைரியத்தை அதிகரித்துக் கொண்டால் ஆன்ம ஞானத் தேடலில் வெற்றி பெறலாம். ஞானம் அடைய வேண்டும் ஞானத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றாலே தாய் தந்தை உற்றார் உறவினர் சூழல் எதுவாக இருந்தாலும் கர்மத்தின்படி நடக்கிறது என்று அமைதியாக இருக்க வேண்டும். தாய் கஷ்டப்படுகிறார் தந்தை சிரமப்படுகிறார் என்று எண்ணும் பொழுதே மீண்டும் மனிதன் மாய வலைக்குள் சிக்கி விடுகிறான். எனவே ஒவ்வொரு உடலும் தோற்றமும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாகப் படைக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும் பெற்று வந்த கர்மங்களின்படி அதன் வாழ்வின் போக்கும் சிந்தனைகளும் சந்திக்கின்ற அனுபவங்களும் அமைகின்றன.

இருந்த போதிலும் துயரங்களை எல்லாம் களைந்து வாழ வேண்டும் என்ற ஆசை இல்லாத உயிரினம் இல்லை. இவற்றுக்கெல்லாம் ஒட்டு மொத்த ஒரே வழி பிரார்த்தனை (பித்ரு தோஷங்களும் தந்தை வழி தாய் வழி முன்னோர் வழி பெற்ற சாபங்களும் தொடர்வதால் இந்த நிலை). பசு மாடுகளுக்கு உணவு ஆலயத்தில் மீன்களுக்கு உணவு இராமேஸ்வரத்தில் தில யாகம் செய்து குறைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு மனிதனுக்கும் துன்பங்கள் இருக்கிறதென்றால் முன்வினை இருக்கிறது என்று பொருள். முன்வினை குறையக் குறைய துன்பங்கள் குறைந்து கொண்டே வரும். இந்த வினைப்பயனை பெரும்பாலும் அனுபவித்து தீர்ப்பது ஒரு வகை. தர்மத்தால் தீர்ப்பது ஒரு வகை. இறை வழிபாட்டால் தீர்ப்பது ஒருவகை.