ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 604

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறை காத்திருக்கிறது. ஆனால் இறையிடமிருந்து அருளைப் பெரும் பக்குவம்தான் மனிதனுக்கு இல்லை. முதலில் இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளும் அது இன்பமோ துன்பமோ ஒரு மாயவலை தான். இதனைத் தாண்டி இறைவனிடம் போகும் போது எனக்கு உன்னைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. நீ தான் வேண்டும் என்று உளமாற ஒரு மனிதன் வேண்டத் தொடங்கி விட்டாலே அவனை விட்டு வினைகள் ஒவ்வொன்றாக ஓடத் துவங்கும். பிறகு அவனுக்கு தேவைகள் என்று எதுவும் இருக்காது. தேவைகளுக்காக இறைவனை அணுகினால் கடைசி வரை ஒரு தேவை போக இன்னொரு தேவை இருந்து கொண்டே தான் இருக்கும். தேவைகளுக்கு வழிபாடு என்பதை விட ஒரு மனிதன் இறை மறுப்புக் கொள்கையிலேயே இருந்து விடலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.