ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 659

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

அகத்தியன் வாக்கை இந்த பூமியில் ஜீவ அருள் ஓலையில் பெறுவதற்கே எத்தனையோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். இவ்வாறு ஓலையில் வாக்கை பெறுவது ஒரு வகை புண்ணியம் என்றாலும் அந்த வாக்கை பெற்று அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் அதனால் கேட்கின்ற மனிதனுக்கு எந்த விதமான நற்பலனும் இல்லை என்பதை எமை நாடுகின்ற மனிதர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இதை பார்ப்பதற்கும் பெறுவதற்கும் புண்ணிய பலன் வேண்டுமென்றாலும் கூட அதனையும் தாண்டி ஒரு சில ஆத்மாக்களுக்கு நேரடியாக அவ்வப்போது காட்சி தந்து வழிகாட்டுவது என்பது வேறு நிலை. இதுபோல ஓலை வழியாக வழி காட்டுவது என்பது வேறு நிலை.

தினசரி செய்ய வேண்டிய கடமைகள்: குறைந்தபட்சம் ஒரு ஆலயம் சென்று மனம் ஒன்றி வழிபட வேண்டும். அப்படி அல்லாதவர்கள் காலையிலும் மாலையிலும் இரண்டு நாழிகை இல்லத்தில் நெய் விளக்கு ஏற்றி உயர்வான முறையில் வாசனாதி திரவியங்களை இட்டு அமைதியாக ஏதாவது ஒரு இறை நாமாவளியை சொல்லி வர வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.