ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 666

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒவ்வொரு மனிதனின் விதியானது மிகமிக நுட்பமானது. அதையெல்லாம் சராசரி மனிதப் பார்வையில் பார்ப்பதும் புரிந்து கொள்வதும் மிகக் கடினம். மனிதன் எண்ணிவிடலாம் உடலில் வலுவிருந்து கையில் தனமிருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்று. அதுபோல் தல யாத்திரை கூட ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவ கிரகத்தினாலும் ஒன்பதாம் இடத்து அதிபதியினாலும் கர்ம பாவத்தினாலும் அதையும் தாண்டி இறைவனின் கருணையினாலும் கடாட்சத்தினாலும்தான் நடக்கும். ஆலய தரிசனமோ தல யாத்திரையோ சரியானபடி திட்டமிடாலே என்று மனிதன் எண்ணிவிடக் கூடாது. சரியான முறையில் திட்டமிடவும் வேண்டும். இறைவனின் அனுக்கிரகமும் வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.