ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 682

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

அளவு பார்க்காமல் நாள் பார்க்காமல் திதி பார்க்காமல் நாழிகை பார்க்காமல் இரவு பகல் பார்க்காமல் பிறர் குறிப்பறிந்து தந்து கொண்டே இருக்க வேண்டும். இது சித்தர்கள் வழி. எது அளவில் உயர்வோ அதை முதலில் தருவது சித்தர்கள் வழி. அதைப்போல் மனதளவிலே அணுவளவும் எந்தவிதமான தடுமாற்றம் இல்லாமல் கொடுப்பதும் கொடுக்கின்ற பொழுதிலே இந்த அளவா? அந்த அளவா? என்று எண்ண அலைகளின் ஏற்ற இறக்கம் இல்லாமல் கொடுப்பதும் சித்தர்கள் வழியில் வருபவர்களின் தன்மையாகும். சற்றும் அஞ்சற்க (பயம் வேண்டாம்) சலனம் வேண்டாம். இதுபோல் எதிர்காலத்தில் இன்னும் அதிகம் செய்ய செய்ய அதுபோல் நிலையை இறைவன் நல்குவார் அருளுவார் என்றெண்ணி தொடர்ந்து சராசரி மனித சிந்தனையிலிருந்து விடுபட்டு எமது வழியில் வருகின்ற சிந்தனையை வளர்த்துக் கொள்ள அனைவருக்கும் நன்மையாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.