ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 653

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையாலே யாம் கூறுகிறோம் அப்பா அதிக அளவு தனம் இருப்பவன் தனவான் என்று மனிதர்கள் எண்ணுகிறார்கள் அப்படி அல்ல அதிகளவு தனம் இல்லை என்றாலும் கூட இருக்கின்றன பணத்தை பிறருக்கு பிறரின் குறிப்பு அறிந்து எவன் தருகிறானோ அவன்தான் மெய்யான தனவானாம் ஆவான். தனத்தை தானே வைத்துக் கொண்டிருக்கக் கூடியவன் உண்மையில் ஏழை தான் இதுபோல் மட்டும் அல்ல நாங்கள் அடிக்கடி கூறுவது போல இருப்பதை கொடுப்பது சிறப்பு இருப்பதை எல்லாம் கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு ஆகும். எனவே கொடுக்கின்ற எண்ணம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அத்தனை பேரும் தனவான் மட்டுமல்ல. இந்த உலகில் அவன் தான் குபேரன் குபேரனுக்கு எல்லாம் குபேரன். ஆனால் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் கொடுப்பதற்கு பொருள் இல்லை என்று ஏங்குகிறானே அப்பொழுது அந்த உண்மையான ஏக்கமே அவன் ககரம் ககரம் கொடுத்ததற்கு சமமாகி இறைவன் அவனுக்கு அதற்குரிய புண்ணிய பலனை தந்து விடுகிறார். ஆனால் இறைவன் அருளால் ஒரு பிறவியில் செய்த புண்ணியத்தால் அதிகம் அதிகம் அழியக் கூடிய செல்வத்தை பெற்ற தனவான் இவையெல்லாம் பிறருக்கு தந்து விட்டால் எனக்கும் என் குடும்பத்திற்கும் பிறரிடம் நிற்க வேண்டிய நிலை வரும் எனவே யாருக்கும் தரமாட்டேன் என்று வைத்திருக்கிறான். அவன் தான் உண்மையில் உலகில் பரம ஏழையாவான். அவன்தான் இருந்தும் வறுமையில் வாடுகின்ற மனிதன் ஆவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.